states

அரசியல் கட்சிகளின் உரிமைகளில் தலையிடுவதா?

புதுதில்லி, அக்.5- அரசியல் கட்சிகளின் உரிமை களில் தேர்தல் ஆணையம் தலை யிடக்கூடாது என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள் ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு அக்டோபர் 5  அன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தேர்தல் நடத்தை விதிகளில் சில திருத்தங்களைச் செய்திட தேர்தல் ஆணையம் முன்மொழிவினை அனுப்பியிருக்கிறது. அரசியல் கட்சி கள், தாங்கள் தேர்தல் அறிக்கையில் நிதி தொடர்பாக அளித்துள்ள உறுதி மொழிகளை நிறைவேற்ற அந்தக்  கட்சிகள் எப்படித் திட்டம் தீட்டியிருக் கின்றன என்றும், அந்தத் திட்டங்கள் மாநில அரசாங்கங்களில் அல்லது ஒன்றிய அரசாங்கத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்திடும் என்றும் கோரியிருக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு முற்றிலும் தேவை யற்ற நடவடிக்கையாகும். அரசமைப்புச்சட்டம், நாட்டில் தேர்தலை நியாயமாகவும் நேர்மை யாகவும் நடத்த வேண்டும் என்றுதான் தேர்தல் ஆணையத்திற்குக் கட்டளை யிட்டிருக்கிறது. அரசியல் கட்சி களின் கொள்கை அறிவிப்புகளை முறைப்படுத்துவதோ மற்றும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு  அளித்திடும் நலத்திட்ட நடவடிக்கை களை முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல. இவை அனைத்தும்  ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் தனி உரிமை களாகும்.

இதே தேர்தல் ஆணையம், ஏப்ர லில் உச்சநீதிமன்றத்தில் அளித்திட்ட ஓர் உறுதிவாக்குமூலத்தில், ஆணை யம் அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளை முறைப்படுத்த முடி யாது என்றும், அவ்வாறு செய்வது  என்பது அதிகார வரம்பு மீறிய ஒன் றாக இருந்திடும் என்றும் குறிப்பிட்டி ருந்தது. இப்போது அதற்கு நேரெதி ரான நிலைப்பாட்டை தேர்தல் ஆணை யம் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சியாளர்களால் அளிக்கப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாக இது மேற்கொள்ளப்பட்டி ருக்கிறதா? மக்களின் பிரச்சனைகள் பற்றிக் கவலைப்படுவதற்கும், அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்க மேற்கொள்ளும் கொள்கை நட வடிக்கைகள் குறித்தும் அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்ற உரிமை களை ஒழுங்காற்று செய்வதாக கூறு வதையோ அல்லது அவற்றைச்  சுருக்குவதற்காக எவ்வித மான முயற்சிகள் மேற்கொள்ளப்படு வதையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.    இவ்வாறு அரசியல் தலைமை குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)