பாஜக ஆளும் உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் அமைதியான முறையில் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள் மீது இந்துத்துவா குண்டர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான இந்துத்துவா குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் டேராடூன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.