கவுஹாத்தி, பிப்.25- கவுஹாத்தியில் உள்ள 58 பிக்பா ரயில்வே நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. கவுஹாத்தியில் ரயில்வேக்குச் சொந்தமான 58 பிகாஸ் நிலத்தை தனியா ருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ரயில்வேக்குச் சொந்தமான காலி இடங்களை குத்தகைக்கு விடுவதற்கு கட்சியின் மாநிலக்குழு அதிர்ச்சியை யும், கவலையையும் தெரிவித்துள்ளது. கவுஹாத்தியில் குத்தகைக்கு விடப்பட உள்ள நிலம் நகரின் மையப்பகு தியில் அமைந்துள்ளது. குத்தகைக்கு விடப்பட உள்ளதில் குவஹாத்தி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பன்பஜார் பகுதியில் சுமார் 40 பிகாஸ் அளவுள்ள நிலம், குவஹாத்தி கிளப்பை அடுத்துள்ள அம்பாரி சௌக்கில் அமைந்துள்ள சுமார் 18 பிகாஸ் நிலம் ஆகியவை அடங்கும். ரயில்வே நிலங்களை குத்தகைக்கு விடக்கூடாது என வலியுறுத்தி கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் இஸ்பாக்குர் ரஹ்மான், சுப்ரகாஷ் தாலுக்தார், திகன்தாஸ், சதன்ஜிப் தாஸ் ஆகியோர் வடகிழக்கு ரயில்வே பொது மேலா ளர் மூலம் ஒன்றிய ரயில்வே அமைச்ச ருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள னர்.