states

img

வரலாற்று உண்மைகளை நீக்குவதா?

புதுதில்லி, ஏப். 7- தேசியக் கல்வி,  ஆராய்ச்சி  மற்றும் பயிற்சி கவுன்சில் பாடப்புத்த கங்களில் முகலாயர் வரலாறு உட்பட பல பகுதிகளை ஒழித்துக்கட்டுவதற் காக ஒன்றிய அரசாங்கம் மேற் கொண்டுள்ள நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: “மாணவர்களின் சுமைகளைக் குறைப்பதற்காகப் பள்ளிப்பாடப் புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டி ருப்பதாக, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) தலைவர் கூறியுள்ள விசித்திரமான வாதம் ஏற்கமுடியாததும், முற்றி லும் திசைதிருப்பக்கூடியதும், வர லாற்றுப் பாடப்புத்தகங்களை ஆட்சி யாளர்கள் தங்களின் மதவெறி சித்தாந் தத்திற்கேற்ப மாற்றி எழுது வதற்குமான சூழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியுமேயாகும். முகலாய சாம்ராஜ்ஜியம் குறித்த ஒட்டுமொத்த அத்தியாயங்களையும் நீக்குவதன் மூலமாக வரலாற்றையே சீர்குலைத்திடும் ஆட்சியாளர்களின் பெரும்பான்மைவாத மனோபாவம் தெளிவாகவே தெரிகிறது.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாகவும், அந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆர் எஸ்எஸ் இயக்கம் தடைசெய்யப் பட்டது என்கிற முக்கிய வாக்கியங் களையும் நீக்க வேண்டும் என்று இவர்கள் கூறியிருப்பதிலிருந்து,  வர லாற்றில் ஆர்எஸ்எஸ் இயக்கம் மேற்கொண்ட வெறித்தனமான பிளவுவாத, வன்முறைச் சம்பவங் களை மூடிமறைத்திட வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் உண்மையான நோக்கம் என்பதும் இதிலிருந்து நன்கு தெரிகிறது. இத்தகைய அருவருப்பான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும், பாடப்புத்தகங் களில் எவ்வித மாற்றத்தையும் செய்யக்கூடாது என்றும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை உட னடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள் கிறோம். கடந்தகால வரலாற்றைக் கற்பதில் ஆர்வம் உள்ள தேச பக்தர்கள் அனைவரும் ஆட்சி யாளர்களின் இந்த முயற்சிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்து கிறோம்.   இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (ந.நி.)