states

img

இந்தியாவில் சமையல் எண்ணெய் விலைகள் கடுமையான உயர்வு!

புதுதில்லி, மார்ச் 10- உக்ரைன் - ரஷ்யா இடையே மோதலை ஏற்படுத்திய அமெரிக்கா, அந்த மோதலையே காரணமாக வைத்து, ரஷ்யாவுக்கு எதிராக பொரு ளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இது உலகளவில் பொருளாதார நட வடிக்கைகளில் தாக்கங்களை ஏற் படுத்தி அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் உயர்வை ஏற்படுத்தி யுள்ளது. அதனொரு பகுதியாக, இந்தியா வின் பெரும்பாலான பகுதிகளில் சமை யலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எண்ணெய்களின் விலைகள் கிடுகிடு வென உயர்ந்துள்ளன. குறிப்பாக சூரிய காந்தி எண்ணெய்யின் (Sunflower Oil) சில்லரை விற்பனை விலை வெகு வாக அதிகரித்து உள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை கண்காணிப்புப் பிரிவுத் தரவுகள் தெரி விக்கின்றன. இந்தியா , ஆண்டொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய்யைப் பயன் படுத்துகிறது. இந்தியாவில், பனை (8-8.5 mt), சோயா பீன் (4.5 mt) மற்றும் கடுகு (3 mt) ஆகிய வற்றிற்குப் பிறகு நான்காவதாக அதி கம் நுகரப்படும் சமையல் எண்ணெய் யாக சூரியகாந்தி உள்ளது.

இதில், 50 ஆயிரம் டன் சூரிய காந்தி எண்ணெய் யை சொந்த நாட்டில் உற்பத்தி செய்யும் இந்தியா, மீதமுள்ளவற்றில் பெரும்பகு தியை உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலி ருந்தே இறக்குமதி செய்கிறது.  வர்த்தக அமைச்சகத் தரவுகளின் படி, சூரியகாந்தி எண்ணெய் இறக்கு மதி 2019-20 நிதியாண்டில் 2.5 மில்லி யன் டன்னாகவும், 2020-21 நிதியாண் டில் 2.2 மில்லியன் டன்னாகவும் இருந் தது. இந்த மொத்த இறக்குமதியில், உக்ரைனிடமிருந்து மட்டும் 2019-20 நிதி யாண்டில் 1.47 பில்லியன் டாலர் மதிப்பி லான 1.93 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும், 2020-21 இல் 1.6 பில்லி யன் டாலர் மதிப்பிலான 1.74 மில்லியன் டன் சூரிய காந்தி எண்ணெய்யும் இறக்கு மதி செய்யப்பட்டது. அதுபோலவே ரஷ்யாவிடமிருந்து, 2019-20 நிதியாண் டில், 287 மில்லியன் டாலர் மதிப்பில் 0.38 மில்லியன் டன் சூரிய காந்தி எண்ணெய்யும், 2020-21 நிதியாண்டில் 235.89 மில்லியன் டாலர் மதிப்பில், 0.28 மில்லியன் டன் சூரியகாந்தி எண் ணெய்யும் இறக்குமதி செய்யப்பட் டது.  

ஆனால், தற்போது ரஷ்யா - உக் ரைன் இடையிலான மோதல் காரண மாக, இறக்குமதி செய்வதில் தடை ஏற்பட்டு, சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இது சந்தையில் விலைஉயர்வை ஏற்படுத்தி யுள்ளது. போருக்கு முன்பு வரை சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ.140-க்கு விற்கப் பட்டது. போர் தொடங்கிய பின்னர் இந்த விலை படிப்படியாக அதிகரித்து, ஒரு லிட்டர் பாக்கெட் ரூ. 165 முதல் 178 வரை உயர்ந்துள்ளது. இதுவே சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் ரூ. 196 வரை விற்கப்படுகிறது. இதே போல பாமாயில் விலையும் அதிகரித் துள்ளது. ரூ. 125-க்கு விற்கப்பட்ட பாமா யில் ரூ.170 ஆக உயர்ந்துள்ளது.  எண்ணெய் விலை மட்டுமல்லாது, கோதுமை விலையும் அதிகரித்துள் ளது.

50 கிலோ மூட்டைக்கு ரூ, 100 உயர்ந்துள்ளது. இதனால் மைதா, ரவை ஆகியவற்றின் விலை கிலோ விற்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை அதிக ரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை உயர்வுக்கு, உக்ரைன் - ரஷ்யா மோதல் ஒரு காரணமாக கூறப்படுவது போல, சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயர்வுக்கு, இந்தோனேசிய நாட்டின் நிபந்தனைகள் சிலவும், காரணமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. அதாவது, இந்தோனேசிய பாமாயில் ஏற்றுமதியாளர்கள் தங்க ளின் திட்டமிட்ட ஏற்றுமதியில் குறைந் தது 20 சதவிகிதத்தை உள்நாட்டுச் சந்தையில் விற்க வேண்டும் என்பது அந்நாட்டில் கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளதாகவும், இதன் காரணமாகவே பாமாயில் விலை அதிகரித்து, அது அனைத்து சமையல் எண்ணெய்யின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்ற னர்.