states

img

உத்தவ் அரசைக் கவிழ்க்க செய்த செலவை ஈடுகட்டத்தான் சிலிண்டர் விலை உயர்வா?

புதுதில்லி, ஜூலை 7- சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலை  மேலும் ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசைக்  கவிழ்க்க செய்த  செலவை ஈடுகட்டத்தான் இந்த விலை உயர்வா?  என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி  நாயக் இதுதொடர்பாக, மேலும் கூறியிருப்பதாவது:  பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயராமலும், பணவீக்  கத்தால் மக்களின் முதுகு உடைக்கப்படாமலும் இருந்தால்தான் மிகப்பெரிய ஆச்சரியம். பிரதமர் மோடியின் மிகப்பெரிய சாதனையே, நாட்டை எல்லா வகையிலும் ஏமாற்றி வெற்றி பெற்றதுதான். ஒரு காலத்தில் சீனாவுக்கு சிவப்  புக்கண் காட்டுவதாக பிரதமர் பேசியிருந்தார். ஆனால், பணவீக்கத்துக்கு எப்போது அவர்  சிவப்புக் கண் காட்டுவார் என நாடேகாத்திருக்கிறது.

மன்மோகன்ஜி காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம், அதிகமான விலையில் இருந்த அத்தியாவசிய எரிசக்தி பொருட்களை வாங்கி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்றது. ஆனால், இப்போது சர்வதேச சந்தை யில் எல்லாமே மலிவாக இருந்தாலும் அது மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலையுயர்ந்த எல்.பி.ஜி. சிலிண்டரை யார் வாங்க முடியும்? 2021-22 நிதியாண்டில் 3 கோடியே 59 லட்சம் வாடிக்கையாளர்களால் சிலிண்டர்களை மறு நிரப்புதல் செய்ய முடியவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இவ்வாறு ராகினி நாயக் கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரத மர் நரேந்திர மோடி கேஸ் சிலிண்டர் விலையை  உயர்த்தியதன் மூலம் மீண்டும் மக்கள்  மீதான தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி யுள்ளார். பிரதமர் மோடி ஆட்சியில் மக்கள்  தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  ஆனால் அவர் இதுபற்றி கவலைப்படுவ தில்லை” என்று விமர்சித்துள்ளது.