states

img

பிரதமர் மோடியைப் பாதுகாக்க வரும் உலகளாவிய ஊழல்வாதிகள்

புதுதில்லி, ஏப்.1 - ராகுல் காந்திக்கு எதிராக, இங்கிலாந்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக லலித் மோடி கூறியிருக்கும் நிலையில், அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் வலுவான பதிலடி கொடுத்துள்ளனர்.  சுமார் 600 கோடி ரூபாய் அளவிற்கான, ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் மற்றும் சூதாட்டப் புகாரில் சிக்கி, 2010-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டே தப்பி யோடி இங்கிலாந்தில் தலைமறைவாக இருப்ப வர் லலித் மோடி. இவர்தான் வியாழனன்று ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக அறி வித்தார். 2019 மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கி ரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அந்தாண்டு ஏப்ரல் 13  அன்று கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப் போது, “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி  என அனைத்து திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது” என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார். இந்தப் பேச்சிற்காக, 2 ஆண்டுகள் சிறைத் ்தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியை யும் ராகுல் காந்தி தற்போது பறிகொடுத்துள் ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிரான ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. 18-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஓரணி யில் திரண்டு போராட்டங்களை நடத்தி வரு கின்றன. 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அர சுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் அளவிற்கு ராகுலின் பதவி பறிப்பு விவகாரம் மாறியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்பட நினைத்தாரோ, அல்லது ராகுல் காந்தி தன்னை அவதூறு செய்தது 3 ஆண்டுகள் கழித்துத்தான் தெரியவந்ததோ என்னவோ, கே.சி. வேணுகோபால் திடீரென ஊழல் மற்றும் நிதி மோசடியுடன் தன்னைத் தொ டர்புப்படுத்தி பேசும் ராகுல் காந்திக்கு எதிராக, தானும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார். “நீதியைக் கண்டு தப்பி ஓடுவதாக ராகுல் காந்தி ஆதரவாளர்கள் என்னை மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறார்கள். எந்த குற்ற வழக்கிலும் நான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட வில்லை. இருப்பினும், எதற்காக, ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள்? 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையாக வருவாயை ஈட்டித் தரும் உலகின் மிக பெரிய விளையாட்டு தொடரை உருவாக்கியவன் நான். காந்தி குடும் பத்தை விட என் குடும்பம் இந்தியாவுக்காக அதிகம் செய்துள்ளது” என்றும் டுவிட்டரில் பதி விட்டுள்ளார். இதனை ராகுல் காந்திக்கு ஆதரவான நகர்வா கவே பார்க்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “பிரதமர் மோடிக்கு உலக ளாவிய ஊழல்வாதிகள் பாதுகாப்புக்கு வருவது அவருக்கு ஏற்பட்டுள்ள புதிய சரிவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும், “லலித் மோடி பல கோடி ரூபாய் மோசடி புகாருக்குப் பயந்து கோழைத்தனமாகத் தப்பியோடியவர். பாஜக-வின் செயலற்ற தன்மை காரணமாக அவர் இப்போது வெளி நாட்டு வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். அவர் கூறுவதை யார் தீவிரமாக எடுத்துக்கொக் ளப் போகிறார்கள்..?” என்று கிண்டல் செய்துள்ளார்.  அதேபோல ‘‘சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று ராகுல் ஜீயை அச்சுறுத்துவதற்காக இப்போது பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து உதவியை பெறுகிறாரா?” என்று காங்கிரஸ் கட்சி யின் ஊடகத்துறை தலைவர் பவன்கேராவும் கேள்வி எழுப்பியுள்ளார்.