states

img

ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து உருவானதே கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி!

சண்டிகர், பிப்.14- ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து உருவானதே கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி என்று காங்கி ரஸ் பொதுச்செயலாளர் பிரி யங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலின் ஒருபகுதியாக, பஞ்சாபின் கோட்காபுராவில் நடைபெற்ற ‘நவி சோச் நவா பஞ்சாப்’ பேர ணியில் பிரியங்கா காந்தி உரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக பஞ் சாபில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இந்த அரசு நீண்ட நாளுக்கு முன்னதாகவே, பஞ்சாப்பில் இருந்து இயங்கு வதை நிறுத்தி விட்டது. அதற்கு பதிலாக தில்லியில் இருந்து அது இயக்கப்பட்டது. இயக்கி யது காங்கிரஸ் அல்ல, பாஜக! இந்த மறைக்கப்பட்ட கூட்டணி (பாஜக - அம்ரீந்தர் கூட்டணி) தற்போது பகிரங்கமாக வெளி வந்துள்ளது. அம்ரீந்தர் சிங்கை நீக்கிவிட்டு, சரண்ஜித் சிங் சன்னி யை முதல்வராக்கியதற்கு இது தான் காரணம். அதேபோல, ஆர்எஸ்எஸ்-இல் இருந்து உருவான கட்சி தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. தில்லியில் கல்வி மற்றும் சுகாதார நிறு வனங்கள் என்ற பெயரில் எது வும் இல்லை. எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் பற்றிய உண்மை யை மக்கள் அறிவது முக்கி யம். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.