புதுதில்லி,ஜன.12- ரூ.3 கோடி மோசடி புகாரில் சிறையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் ரத்தானதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். காவல்துறையினர் தீவிரமாக தேடி, கடந்த 5 ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதி யில் அவரை கைது செய்தனர். பின்னர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஜனவரி 12 புத னன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொட ரப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீனை உச்சநீதி மன்றம் வழங்கியது. ராஜேந்திரபாலாஜி தனது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விருது நகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர் மீது நடைபெற்று வரும் விசார ணைக்கு ராஜேந்திர பாலாஜி முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.