states

பொது சிவில் சட்டம், குடிமக்கள் பதிவேடு இரண்டுமே சமூகத்தைப் பிளவுபடுத்தும்!

புதுதில்லி, மே 8 - பொது சிவில் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு ஆகிய இரண்டுமே இந்த சமூகத்தை பிளவுபடுத்தக் கூடிய தாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவரும், ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால், பொது சிவில் சட்ட மும், தேசிய குடிமக்கள் பதிவேடும் கொண்டுவரப்படும் என்று பாஜக தனது  தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பின்னணியில் ப. சிதம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம்  ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டி யில், அவர் மேலும் கூறியிருப்பதாவது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, மாநிலம் தாராளவாதம் கொண்ட, ஜனநாயக ரீதியிலான, பன்முகத்தன்மையும் சகிப்புத்தன்மையும் கொண்ட முற்போக்கான மாநிலமாக வேண்டுமா, அல்லது உள்நோக்கமுள்ள, பெரும்பான்மை வாதம் கொண்ட, சகிப்புத்தன்மை இல்லாத, பிற்போக்குத் தனமான மாநிலமாக மாற வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், மாநில மக்கள் புத்திசாலித்தனமாக தங் களுக்கானதைத் தேர்ந்தெடுப்பார்கள்.  

ஏனெனில், கர்நாடகத்தின் எதிர்கா லத்துக்காக, அங்கு பாஜக வெற்றி பெறுவதையும், அந்த வெற்றியின் மூலமாக அதன் அண்டை மாநிலங் களில் அந்தக் கட்சி நுழைவதையும் நாம்  தடுத்து நிறுத்தியாக வேண்டும். பொது சிவில் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு ஆகியவற்றை கர்நாடக மாநிலத்தில் கொண்டு வருவ தாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அவை இரண்டுக்கும் சமூகத்தைப் பிளவுபடுத்துகிற, சமூக மோதல் களைத் தூண்டி விடுகிற சாத்தியம் உண்டு.  சில வடக்கு மற்றும் வட கிழக்கு மாநி லங்களில் என்ன நடந்தது என்று நாம் பார்த்திருக்கிறோம். எனவே, கர்நாடக மக்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகளை நிராகரிப்பார்கள் என்றே கருதுகிறேன். தன் மீது அவதூறு வாரி இறைக்கப் படுவதாக பிரதமர் மோடி பிரச்சனை எழுப்பி இருக்கிறார். அவதூறு வாரி இறைப்பது என்றால் என்ன என்பது பார்க்கப்பட வேண்டும். தேர்தலில் தீவிரமாக அரசியல் மொழி பேசுவது அவதூறு அல்ல. சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகி யோருக்கு எதிராக பாஜக தலைவர்கள் வீசிய அவதூறுகளை எண்ணிப் பார்ப்போமா? எனவே, இது அர்த்தமற்ற  செயல் ஆகும். இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள் ளார்.