புதுதில்லி, ஜன. 23 - 2011-ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக செயல்பட்டு வரும் பாஜக எம்.பி., (உத்தரப்பிரதேசம்) பிரிஜ் பூஷன் சரண் சிங் (66), மல்யுத்த வீராங்கனைகள், புதிதாக பயிற்சிக்கு சேரும் சிறுமிகள், பெண் பயிற்சியாளர்கள் என அனை வருக்கும் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமாக இருக்கும் சில பயிற்சியாளர்களும் பாலியல் தொல்லை, மனதளவில் நெருக்கடி அளித்ததாகவும் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கடந்த புதன்கிழமை (18-ஆம் தேதி) குற்றம்சாட்டினார். அடுத்த சில மணிநேரங்களில், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பஜ்ரங் புனியா, சாக் ஷி மாலிக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர் - வீராங் கனைகள் குழுவாக கூடி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை துவங்கினர்.
இந்த போராட்டம் திங்க ளன்று 6-வது நாளை கடந்துள்ள நிலையில், பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் கொண்ட விசார ணைக் குழு அமைக்கப்படுவதாக வும், விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பொறுப்பு விவ காரங்கள், இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) குழு மற்றும் கூட்டமைப்பின் விவகாரங்களில் இருந்து விலகி இருக்குமாறும் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சகம் ஞாயி றன்று மாலை உத்தரவிட்டது. இந்நிலையில், பிரபல குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம், விசாரணைக் குழுவிற்கு தலைமை தாங்குவார் என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திங்களன்று அறி வித்தார். மேரி கோம் தலைமை யிலான குழு ஒரு மாதத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என வும், அறிக்கை வெளியாகும் வரை மேரி கோம் மற்றும் விசாரணைக் குழு மேற்பார்வையில் இந்திய மல்யுத்த சம்மேளனம் தொடர்ந்து செயல்படும் என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.