states

இத்தாலிய தொழிலாளர் வேலைநிறுத்தம் வெற்றி பெற சிஐடியு வாழ்த்து

புதுதில்லி, மே 28- இத்தாலிய தொழிற்சங்கமான யுஎஸ்பி-யின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் வெற்றி பெற இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) வாழ்த்து தெரிவித் துள்ளது. இதுகுறித்து சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் மற்றும் தலைவர் ஹேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழு மில்லியனுக்கும் அதிக மான தொழிலாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வர்க்கம்சார் தொழிற்சங்க கூட்டமைப்பான இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), டபிள்யுஎப்டியு(WFTU)-உடன் இணைந்து, யுஎஸ்பி (USB - Unione sindacale di base) என்ற தலைப்பின் கீழ், இத்தாலிய தொழிலாளர் வர்க்கத்தையும் இணைத்து சர்வதேச தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை விரிவுபடுத்துகிறது.  தொழிலாளர்கள் மீதும், அவர்களின் வாழ்வாதாரம் மீதும் நடத்தப்படும் தொடர்  தாக்குதல்கள், அதிகரிக்கும் பணவீக்கம், தொழிலாளர்களின் வேலை பாது காப்பின்மை மற்றும் பணியின் போது நிகழும் ஆபத்துகள், வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து, இத்தாலிய தொழிற்சங்கமான யுஎஸ்பி மே 26 முதல் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது. வலதுசாரி பிரதமர் ஜார்ஜியா மெலானி தலைமையிலான புதிய பாசிச வலதுசாரி அரசு, தொழிலாளர்களின் ஊதியத்தை வெகுவாக குறைத்து தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறது.

மேலும், கார்ப்பரேட் மற்றும் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு மானிய வரிவிதிப்பின் மூலம் சலுகைகளை வழங்குகிறது. உழைக்கும் மக்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 10 யூரோ என ஊதி யம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அத்தியா வசியப் பொருட்கள் மற்றும் தொழி லாளர்கள் மீது சுமத்தப்பட்ட கட்டணங் களை குறைக்க வேண்டும். பண வீக்கம் அதிகரித்து வரும் சூழலில், தொழி லாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என யுஎஸ்பி வலியுறுத்தி உள்ளது. மே 26 அன்று, டார்னியோ, மிலானோ,  லா ஸ்பேசியா, பொலாங்கோ, பார்மா, நபோலி உட்பட இத்தாலியின் பல முக்கிய நகரங்கள், தொழிற்சங்கத்தின் இந்த வேலைநிறுத்தத்திற்கு சாட்சியாக திகழ்ந்தன. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. பெருநகரங்களில் மெட்ரோ, பேருந்துகளின் இயக்கம்  பெரிதும் பாதிக்கப்பட்டன. யுஎஸ்பி (இத்தாலிய தொழிற்சங்கம்) முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு சிஐடியு முழு ஆதரவு தெரிவித்துள்ளது மட்டு மின்றி, இத்தாலிய அரசாங்கம் தொழி லாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தி யுள்ளது. இத்தாலிய உழைக்கும் மக்க ளுக்காகவும், யுஎஸ்பி-யின் இந்த வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் ஒன்றிணைந்த தொழிற்சங்க உறுப்பினர்கள், இத்தாலி மற்றும் வெளிநாட்டில் உள்ள டபிள்யுஎப்டியு நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தோழமைச் சங்கங்களுக்கும், தொழிலாளர் களுக்கும் சிஐடியு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.