சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
புதுதில்லி, மார்ச் 14- எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி வழிகாட்டுதல்களில் செய்யப் பட்டுள்ள மாற்றங்கள், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான பாஜகவின் அணுகுமுறையை உறுதிப் படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள் ளார். நரசிம்மராவ் அரசாங்கத்தால் 1993-ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நாடாளு மன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகு திகளில் அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு, எம்.பி. க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பட்டியலின, பழங்கு டியின மக்கள் வாழும் பகுதிக்கு முறையே 15%, 7.5% தனி நிதி ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்கியது. அதா வது ஐந்தாண்டுகளில் செலவழிக்கப் பரிந்துரைக்கும் ரூ. 25 கோடி பெறு மானமுள்ள பணிகளில், குறைந்த பட்சம் ரூ.3.75 கோடியை பட்டிய லின பகுதிகளிலும், ரூ.1.87 கோடி யை பழங்குடியின பகுதிகளிலும் செலவிடவேண்டும் என்பதே விதி யாகும். இந்த கட்டாய விதியால் பட்டி யலின, பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் ஓரளவு குறிப்பிட்ட வசதிகளைப் பெற்று வந்த நிலையில், நடப்பு நிதியாண்டிலிருந்து (2023-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல்) எம்.பி. க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து பட்டியலின, பழங்குடியின மக்களுக்கென தனி நிதி ஒதுக்கீடு செய்வது கட்டாயமில்லை என ஒன்றிய மோடி அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
ஜான் பிரிட்டாஸ் எம்.பி., கடிதம்
இந்த புதிய வழிகாட்டுதல்கள் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படு த்திய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச் சர் ராவ் இந்தர்ஜித் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், “பட்டிய லின, பழங்குடியின பகுதிகளின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக 15%,7.5% கட்டாய விதிகளாக இருந்த நிலையில், புதிய வழிகாட்டுதலால் இனி கட்டாய விதிகள் வெறும் ஆலோசனை விதிகளாகவே மாறும். ஒன்றிய மோடி அரசின் இந்த புதிய வழிகாட்டுதல் கல்வி போன்ற துறைகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். கட்டாய நிதி ஒதுக்கீடு மூலம் குடிநீர் வசதி, சாலைகள் அமைத்தல், பள்ளிகளுக்கான கழி வறைகள் போன்ற பணிகள் மூலம் பட்டியலின, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டிற்கு நிதி உதவியாக உள்ளது. ஆனால் தற்போதைய வழிகாட்டுதல் பட்டி யலின, பழங்குடியின மக்களின் நலன்களுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்த நிதி கட்டாயம் எனும் பிரிவு நீக்கப்பட்டது. இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில்,”எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி வழி காட்டுதல்களில் மாற்றங்கள் சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்கு முறையை நிலைநிறுத்தவும், பட்டி யலின, பழங்குடியின மக்களுக்கு எதிராகவும் உள்ள பாஜகவின் அணுகுமுறையை உறுதிப்படுத்து கிறது. எம்.பி.க்கள் பட்டியலின, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி களின் வளர்ச்சிக்காக முறையே 15%, 7.5 % கட்டாயமாகச் செலவிடுவதை உறுதிசெய்ய மோடி அரசு இந்தப் புதிய விதிகளை மாற்றியமைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.