states

சந்திரயான்- 3 ஆகஸ்ட்டில் ஏவப்படும்

ஸ்ரீஹரிகோட்டா,பிப்.3- நிலவை ஆய்வு செய்வதற்கான முயற்சியில் இந்திய விண்வெளி ஆரா ய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று ஹரிகோட்டா வில் இருந்து நிலவின் தென்துரு வத்தை ஆராய  சந்திரயான்-2 விண் கலம்  விண்ணில் செலுத்தப்பட்டது.  இதையடுத்து சந்திரயான் 3-ஐ  செலுத்த ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று  வரு கின்றன. இதில், ஆர்பிட்டர் கிடை யாது. ஏற்கனவே சந்திரயான்-2 ல் உள்ள  ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலன்களை மட்டும் அனுப்ப திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவலை  தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால்  இஸ்ரோவின் ஆய்வுப் பணி கள் சுமார் 6 மாத காலம் முடங்கின. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளதால்  ராக்கெட்ஏவுதல், செயற் கைக் கோள் தயாரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை இஸ்ரோ தீவிரப் படுத்தியுள்ளது. இந்த நிலையில், சந்திரயான்-3 வரும் ஆகஸ்ட் மாதம் ஏவப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள் ளது. ஆகஸ்ட் 2022 இல் ஜிஎஸ் எல்வி-எம்கே 3 ராக்கெட் மூலம் சந்தி ரயான் 3 ஐ விண்ணில் செலுத்த இஸ்ரோ இலக்கு வைத்துள்ளது என்று  டிவிட்டரில் இஸ்ரோ பதிவிட்டுள்ளது.