சென்னை, பிப்.26- டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பதிவெண் மாற்றம், வினாத்தாள் குளறுபடி போன்றவற்றை காரணம் காட்டி காலதாமதமாக நடத் தப்பட்ட தேர்வுக்கு பின்னால் முறைகேடுகள் நடக்க வாய்ப் பிருப்பதாக தேர்வெழுதிய வர்கள் குற்றஞ்சாட்டி உள்ள னர். 2019-ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெறும் தேர்வு என்பதால் பலத்த எதிர்பார்ப் போடு தேர்வெழுத வந்த வர்களுக்கு முதலில் வினாத் தாள் பதிவெண் அடிப்படை யில் கொடுக்காமல் மாற்றி கொடுக்கப்பட்டது. பதிவெண் மாற்றிக் கொடுக்கப்பட்டதை தாமத மாக கண்டுபிடித்து, வினாக் களுக்கு பதில் அளிக்கப்பட்ட வினாத்தாளை பெற்று அதனை உரிய தேர்வர்களிடம் கொடுக்க ஒன்றே முக்கால் மணி நேரம் தாமதமானது. மதுரை, சிதம்பரம், சென்னை கல்லூரிகளில் விடைத்தாள் கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வழங் கப்பட்டது. பதிவெண் குழப்பத்தால் கண்காணிப்பாளர்கள் தவித்துக் கொண்டிருந்ததை சாதகமாக்கிக் கொண்டு சிலர் செல்போன் மூலம் விடை தேடி எழுதியதாக பெண் தேர் வர் ஒருவர் புகார் தெரிவித் தார். வினாத்தாளில் ஒரு அடித்தல் இருந்தாலே பக்கத்துக்கு 2 மதிப்பெண் குறைக்கப்படும் என்ற விதி இருக்க ஏற்கனவே எழுதி வைத்த வினாத்தாளில், உள்ள தவறான பதில்களை அடித்து விட்டு புதிதாக தாங்கள் எப்படி எழுதுவது? என்று கேள்வி எழுப்பினர். ஒரு கட்டத்தில் தேர்வு அறையை விட்டு வெளியே வந்து போராடிய தேர்வர் களிடம் காலதாமதத்திற்கு இணையான நேரம் கொடுக் கப்படும் என்றனர். பின்னர் அவர்களுக்கு வினாக்கள் நிரப்பபடாத புதிய வினாத்தாள்கள் வழங் கப்பட்டதை தொடர்ந்து தேர்வு நடைபெற்றது.