states

img

அதானி - மோடியை விமர்சித்ததாலேயே கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்!

புதுதில்லி, ஏப். 15 - தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக் கில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவா லுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அவர், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) காலை 11 மணிக்கு  விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது.  தில்லியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை ஊழலுக்கு வழிவகுத்ததாகக் கூறி தொட ரப்பட்ட இந்த வழக்கில், தில்லியின் முன் னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெ னவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். இந்த வரிசையிலேயே கெஜ்ரிவாலுக்கும் சிபிஐ தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்துப் பதிவில், “கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. பாஜக சொல்கிறது: இது சட்டத்தின் நடவடிக்கை என்று; ஆனால், என்னுடைய நிலைப்பாடு: துன்புறுத்தல் நடக்கிறது என்பதாகும்..” என்று குறிப்பிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘தில்லி சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், அதானி குழு மத்தின் கறுப்புப் பணம், பிரதமர் நரேந்திர மோடிக்குச் சொந்தமானது என்று குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்தே கெஜ்ரி வாலை சிறையில் அடைக்க சதி நடக்கிறது. இதன்படியே சிபிஐ தரப்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஊழலை மறைக்க, பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்’’ என்று சஞ்சய் சிங் சாடியுள்ளார்.