“தெலுங்கானா மாநிலத்தில், மக்களின் மனநிலை ‘பாரத் ராஷ்டிர சமிதி’ (BRS) கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சில கருத்துக்கணிப்புகளில் தெரிகிறது. எதிர்வரும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்த
லில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் 95 முதல் 105 தொகுதிகளில் பிஆர்எஸ் நிச்சயம் வெற்றி பெறும். சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் எந்தக் கட்சியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது. பிஆர்எஸ் அனைத்து பிரிவினரையும் சமமாக நடத்துகிறது. இதுவே பிஆர்எஸ் வெற்றியின் ரகசியம். தெலுங்கானா மாதிரி வளர்ச்சியைத்தான் நாடு விரும்புகிறது. மறுபுறத்தில் குஜராத் மாதிரி (வளர்ச்சிக்கான) போலியானது. பிரதமர்
நரேந்திர மோடி நாட்டை வீழ்த்தி விட்டார்” என்று பிஆர்எஸ் கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.