அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக பூபேஷ் பாகல் மீது வழக்கு
சோதனையின் போது ஆவணங்கள் கிடைக்கவில்லை
மதுபானக் கொள்கை விவ காரத்தில் தொடர்பு இருப்ப தாகக் கூறி சத்தீஸ்கர் முன் னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் வீட்டில் (பிலாய் நகரம்) திங்களன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பூபேஷ் பாகல், சைதன்யா பாகல் வீடு மட்டு மின்றி, அவருக்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில், இந்த சோதனை யின் போது அமலாக்கத்துறை அதி காரிகளின் வாகனம் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதாவும், இதுதொடர்பாக ஓல்ட் பிலாய் காவல்நிலையத்தில் பூபேஷ் பாகல், சைதன்யா பாகல் உள்ளிட் டோர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
பூபேஷ் பாகலை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய சோ தனையின் முடிவில் ரூ.33 லட்சம் பணம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள் ளது. அது பூபேஷ் பாகலின் சொந்த பணம் என்றும், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆவணங்கள் கிடைக்காததால் இந்த பிரச்சனையை திசை திருப்ப வே அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என வழக் குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது.