புதுதில்லி, மார்ச் 8 - உக்ரைனிலிருந்து திரும்பி வரும் இந்திய மாணவர்களின் கல்வி எதிர்கா லம் மிகப்பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, உக்ரைனில் படிப்பதற்காக மாணவர்கள் வங்கி களில் பெற்ற கல்விக் கடன் தொகையை எவ்வித நிபந்தனையுமின்றி தள்ளு படி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யும் எழுந்துள்ளது. ரஷ்ய - உக்ரைன் போரை தொடர்ந்து, உக்ரைனிலிருந்து பல்லாயிரக்கணக் கான மாணவர்கள் வெளியேறி இந்தியா வந்துள்ளனர். இந்த நிலையில், அவர் களது கல்வி எதிர்காலம் எந்தவிதத்தி லும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு திங்களன்று கடிதம் எழுதியிருந்தார். அந்த குரல் நாடு தழுவிய குரலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் செல்வ தற்காக மாணவர்கள் கல்விக் கடனாக பல லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். இந்தக் கல்விக் கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். இந்தியாவிலிருந்து சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் உக்ரை னில் பயின்று வருகிறார்கள். இவர்கள் பெற்ற கல்விக் கடனை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்து இந்திய வங்கிகள் சங்கம் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி, உக்ரைனிலிருந்து பதற்றத் துடன் திரும்பி வந்துள்ள மாணவர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஜனவரி மாத கணக்குப் படி ஒட்டுமொத்தத்தில் நாடு முழுவதும் இந்திய வங்கிகள் ரூ.63ஆயிரத்து 57 கோடி கல்விக்கடன் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இது கடந்த ஆண்டு டன் ஒப்பிடும்போது, 2.4 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையில், உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் எவ்வளவு கடன் பெற்றிருக்கிறார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. உக்ரைனில் மருத்துவப் படிப்பு பயில அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகிறது. எனவே, குறைவான அளவிலேயே உக்ரைனில் பயிலும் மாணவர்கள் கல்விக் கடன் பெற்றிருக்க வாய்ப்புள் ளது என்று கூறப்படுகிறது. இதே மருத்து வப் படிப்பை இந்தியாவில் பயில ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவாகிறது என்பது கவனிக்கத் தக்கது. இத்தகைய நிலையில், மாண வர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற குரலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பி யுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 7 ஆண்டு காலத்தில் மோடி அரசு, தனது கூட்டுக் களவாணிகளுக்காக ரூ.10.72 லட்சம் கோடி அளவிற்கு மிகப் பெரும் மலைப்பு தரும் அளவிலான தொகை யை எவ்வித கேள்வியுமின்றி தள்ளுபடி செய்திருக்கிறது. எனவே, உக்ரைனி லிருந்து திரும்பியுள்ள மாணவர்களின் கல்விக் கடன்கள் மற்றும் வட்டி உள்ளிட்ட அனைத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி முற்றாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார். அவர்கள் எந்தவிதத் திலும் இந்த தொகையை திரும்பிச் செலுத்த இயலாது என்று அரசு கவ னத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளார். (ஒன்றிய நிதியமைச்ச ருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்)