ராகுல் காந்தி எம்.பி. தனது வய நாடு தொகுதிக்கு வந்தார். ஞாயிறன்று வயநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புதிய மின் கட்டமைப்பு சேவையை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசு கையில் , “பழங்குடிகளே நாட்டின் உண்மையான உரிமையாளர்கள். அவர்களைக் குறிக்க ஆதிவாசி என்றொரு வார்த்தை இருக்கி றது. அதன் அர்த்தம் நிலத்தின் அசல் உரி மையாளர்கள் என்ப தாகும். அந்த வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஞானத்தின் அடை யாளம். அது நாம் வாழும் இந்த பூமியின் மீதான புரிதலின் வெளிப்பாடு, நமது பூமி மீது நாம் கொண்டிருக்கும் உறவினை சுட்டிக்காட்டு வது. ஆதிவாசி எனும் வார்த்தை நமது பழங்குடியின சகோதர, சகோதரிகள் தான் தேசத்தின் உண்மையான உரிமையா ளர்கள் என்பதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள உதவுகிறது. அதனால் உண்மை யான உரிமையாளர்களுக்கு நிலத்தின், வனத்தின் மீதான உரிமையை வழங்க வேண்டும். அவர்கள் விரும்பியதை செய் யும் உரிமையையும் வழங்க வேண்டும். வனத்தின் மீது உங்கள் உரிமை களை விட்டுக் கொடுக்கக்கூடாது. வனத்தி லிருந்து விளைவிக்கும் பொருட்களுக் கான உரிமை உங்களுடையது. ஆனால் சிலர் உங்களை ‘வனவாசி’ என்று அழைக்கிறார்கள். வனவாசி என்ற சொல், இந்தியாவின் அசல் உரிமையா ளர்கள் நீங்கள் என்ற உரிமையை மறுக்கி றது. அது உங்களை கட்டுப்படுத்துகிறது. வனவாசி என்ற சொல்லின் பின்னால் இருக்கும் அர்த்தம், நீங்கள் வனத்தினுள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சுருக்கு கிறது. இதை ஏற்பதற்கில்லை. இந்த சொல் உங்களின் வரலாற்றை சிதைக்கி றது. உங்களின் பாரம்பரியம் மற்றும் நாட்டு டன் உங்களது உறவை சிதைக்கிறது. ஆனால் எங்களுக்கு நீங்கள் ஆதி வாசி தான். உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். . ஆதி வாசிகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு எப்போ தும் உற்ற துணையாக இருப்போம்” என்று தெரிவித்தார்.