states

img

ராஜஸ்தானில் செங்கல் சூளை தொழிலாளர்கள் போராட்டம்

ராஜஸ்தான் மாநிலம் அனுமன்காரில் கூலி உயர்வு மற்றும் செங்கல் சூளைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கக் கோரி செங்கல் சூளை தொழிலாளர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவகலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமேஷ்வர் வர்மா தலைமை தாங்கினார். போராட்டத்துக்கு இடையே தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்  மார்ச் 18ஆம் தேதி அனுமன்கார் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு மீண்டும் பிரம்மாண்ட அளவில் போராட்டம் நடத்தபடும் என ராமேஷ்வர் வர்மா அறிவித்துள்ளார்.