states

அனுமன் யாத்திரையில் ஆயுதங்களுடன் சிறுவர்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு

புதுதில்லி, ஏப்.18-  புதுதில்லியில் அனுமன்  யாத்திரையின் போது சிறு வர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் பயங்கர ஆயு தங்களோடு பேரணியாக சென்று கலவரத்தில் ஈடுபட்ட தும், காவல்துறையினரை வன்முறை கும்பல் துப்பாக்கி யால் சுட்ட காட்சிகளும் வெளி யாகியுள்ளன.  நாடு முழுவதும் சனிக்கிழமையன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தில்லியில் உள்ள சஹாங்கீர்பூரி பகுதி யில் நடைபெற்ற அனுமன் யாத்திரையில் கலவரம் வெடித்தது. இருதரப்பினர் இடையே நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர்.  கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த நிலையில் பேரணி யின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் வாளோடு சென்று கோஷம் எழுப்பியதும், கலவரத்தில் ஈடுபட்ட காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.  இதேபோல் கலவரத்தின் போது காவலர் ஒருவரை  இளைஞர் ஒருவர் துப்பாக்கி யால் சுடும் காட்சிகளும் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரம் தொடர்பாக இதுவரை சிறார் உட்பட 21 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.