புதுதில்லி, ஏப்.23- இந்திய மக்களின் உயிர்களைக் காப் பாற்றும் உணர்வை ஆட்சியாளர்கள் தொலைத்து விட்டனர்; பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, வயது வராதவர்களுக்கான தடுப்பூசி விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள், என்று, கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து வழங்கிய ‘சீரம்’ தடுப்பூசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இரண்டு தடுப்பூசிகளு கான இடைவெளியைக் குறைக்க வேண்டும்; பூஸ்டர் தடுப்பூசியை விரைவு படுத்த வேண்டும் என்று கூறியுள்ள ஆதார் பூனாவாலா, இதனை தனது லாப நோக்கத்திற்காக சொல்லவில்லை; என்னிடம் பணம் நிறையவே இருக்கிறது என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். ‘டைம்ஸ் நெட்வொர்க்’ ஏற்பாடு செய் திருந்த பொருளாதார மாநாட்டில், இது தொடர்பாக ஆதார் பூனாவாலா மேலும் கூறியிருப்பதாவது:
“தொற்றுநோயின் முதல் இரண்டு அலைகளில் மக்கள் அனுபவித்த வலி களை மீண்டும் பார்க்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி இடை வெளியை தற்போதைய ஒன்பது மாதங் களில் இருந்து ஆறு மாதங்களுக்கு குறைக்க வேண்டும். மக்கள் நலன் கருதி இதனை நான் தொடர்ந்து கூறி வரு கிறேன். நான் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. ஏற்கெனவே அது என்னிடம் போதுமான அளவு உள்ளது. வீணாவதை தவிர்க்க நான் கொரோனா தடுப்பூசிகளையும் இலவச மாகவும் வழங்கியுள்ளேன். எனது நோக் கம் பணமாக இருந்தால் நான் அவ்வாறு செய்திருக்க மாட்டேன். எனது கருத்து என்னவெனில், வயது வந்தவராக இருந் தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு நபரின் உயிருக்கு விலை நிர்ண யம் செய்ய முடியாது. எனவே இரண்டாவது அலையின் போது நாம் செய்தது போல் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பது காலத் தின் தேவையாகும். பூஸ்டர் டோஸ் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் நாம் வேகமாக செயல்பட வேண்டும்.
கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தி விட்டோம்
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க வேண்டிய முக்கிய நபர்கள், சரியான நேரத்தில் சந்திக்க வேண்டிய குழுக்கள் இனி எந்த அவசரமும் இல்லை என்று எண்ணுவ தாக தோன்றுகிறது. இது வழக்கம்போலான வியாபாரம் என்று அவர்கள் கருதலாம். இவ்வளவு தூரம் எங்களை இங்கு கொண்டு வந்த வேகம் தற்போது குறைந்து விட்டது. ஒரு மருந்தின் விலையை ரூ. 600 லிருந்து ரூ. 225 ஆக பெருமளவில் குறைத்த பிறகும் மக்கள் தடுப்பூசிகளை குறைவாக எடுத்துக்கொள்வதற்கு முக்கிய கார ணம் அதிகரித்து வரும் சோர்வே. எங்களிடமே தற்போது 20 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் விற்ப னையாகாமல் கையிருப்பில் உள்ளன. அவற்றை என்ன செய்வது என்று தெரிய வில்லை. அவை காலாவதி ஆகிவிடும் என்பதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கொரோனா தடுப்பூசி தயா ரிப்பை நிறுத்திவிட்டோம். கையிருப்பில் உள்ள தடுப்பூசி டோஸ்களை யார் வாங்கிக்கொள்ள முன் வருகிறார்களோ அவர்களுக்கு இலவச சலுகைகளை வழங்கவும் முன்வந்துள்ளோம். பூஸ்டர் டோஸ்கள் செலுத்துவதற்கு மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் உள்நாட்டிலும் வெளியிலும் பய ணம் செய்ய வேண்டியிருப்பதாலும், பல நாடுகள் பயணத்திற்கு பூஸ்டர் டோஸ்களை கட்டாயமாக்கியுள்ளதா லும் இது தேவைப்படுகிறது. இரண்டு டோஸ்களுக்கு இடையி லான இடைவெளியை ஒன்பது மாதங் கள் என்பதை 6 மாதங்களுக்கு குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். தடுப் பூசி இடைவெளியை அதிகரிக்கும் போது ஆன்டிபாடி குறைகிறது என்பதை உலக அளவிலான ஆய்வுகள் காட்டு கின்றன. 7 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அர சின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கி றோம். கோவோவாக்ஸ் தடுப்பூசி நீண்ட காலத்திற்கு முன்பே ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்ற போதிலும் இது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் இது ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் நீண்டகாலமாக விநியோகத்தில் உள்ளது. ஒட்டுமொத்த மாக, சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை அரசு அங்கீகரித்தாலும், அவசர உணர்வை தொலைத்து விட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு ஆதார் பூனாவாலா பேசி யுள்ளார்.