states

img

காவல்துறையின் சடலம் மிதக்கும்

கோழிக்கோடு, பிப். 23 - கோழிக்கோட்டில் ஆணையர் அலு வலகம் நோக்கி நடந்த பேரணியில், காவல்துறையினருக்கு எதிராக யுவ மோர்ச்சா அமைப்பினர் கொலை வெறி முழக்கம் எழுப்பினர். யுவ மோர்ச்சா நடவடிக்கையை தடுத்த கோழிக்கோடு நடக்காவு சிஐ யின் தலையை துண்டிக்க வேண்டும் என்று பாஜக மாவட்ட பொதுச் செயலா ளர் பி.சி.மோகனன் கொலைவெறி முழக்கம் எழுப்பினார். பா.ஜ.க மாவட்ட செயலாளரும், கவுன்சில ருமான ரினீஷ் பேசுகையில், “காக்கி அணியாமல் இருந்திருந்தால், அவர் களது சடலம் மிதந்திருக்கும்” என மிரட்டல் விடுத்தார். யுவ மோர்ச்சா ஊழியரை தாக்கிய சிஐ-யை பணியிடை நீக்கம் செய்யக் கோரி கமிஷனர் அலுவலகம் முன்பு நடந்த பேரணியின் போது இந்த கொலைவெறி முழக்கம் எழுந்தது. பேர ணியின் போது, மோதலை உருவாக்க  முயற்சி நடந்தது. ஆனால் காவல்துறை யினர் கட்டுப்பாட்டை கடைப்பிடித்த னர். போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.