states

img

அதானி, ஆன்லைன் சூதாட்ட விவகாரங்களால் நாடாளுமன்றம் முடங்கியது!

புதுதில்லி, மார்ச் 14- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமர்வுகள் திங்களன்று துவங்கிய  நிலையில், முதல்நாளே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.  சமையல் எரிவாயு விலை உயர்வு, அதானி யின் பங்குச் சந்தை ஊழல், அரசுக்கு எதிராக  போராடுவோர் மீதான சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டு உள்ளிட்ட விவகாரங்களைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. முன்னதாக இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில்,  காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டுக் கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), மதிமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 16 கட்சிகளின் தலைவர்கள்  கலந்து கொண்டனர். அதில், அதானியின் ஊழல், சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவ றாக பயன்படுத்துவது தொடர்பான பிரச்சனை களில் 16 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படு வது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதானி ஊழல் உள்ளிட்ட முக்கியப்  பிரச்சனைகள் விவாதத்திற்கு வருவதைத் தடுப்பதற்காக, மோடி அரசானது, ராகுல் காந்தி யின் லண்டன் உரையை பிரச்சனையாக்கி அமளி யில் மாற்றியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க  வேண்டுமென்று பாஜக எம்.பி.க்கள் கூச்சலில் ஈடுபட்டனர். பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், செவ்வாயன்று காலை 11  மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது,  மீண்டும் ராகுல் காந்தி உரை தொடர்பான பிரச்ச னையைக் கிளப்பி, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள்  கோஷம் எழுப்பினர். மறுபுறத்தில், அதானி ஊழல், ஆன்லைன் சூதாட்ட விவகாரம் குறித்து  விவாதிக்க வேண்டும் என தாங்கள் விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, எதிர்க்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவை களும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப் பட்டன. ஆனால், அதன்பிறகும் அமளி நீடித்த தால், இரண்டாவது நாளாக, நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது:  மாநிலங்களவை வாழ்த்து

காலையில் அவை நடவடிக்கைத் தொடங்கி யதும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆஸ்கர் விருதுகள் வென்றதற்காக ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிபண்ட் விஸ்ப ரர்ஸ்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரி வித்தார். “இந்த அங்கீகாரம், நமது இந்திய கலை ஞர்களின் பரந்துபட்ட திறமை, மகத்தான படைப்  பாற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப் படுத்துகிறது. உலக அளவிலான நமது எழுச் சிக்கான மற்றொரு அம்சம் இது” என்றும் கூறி னார். எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜெயாபச்சன், அமர் பட்நாயக், டாக்டர் சாந்தனு சென், பிரி யங்கா சதூர்வேதி, ரஞ்சித் ராஜன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் ஆஸ்கார் விருது வென்ற படக்குழுவினருக்கு பாராட்டு தெரி வித்தனர்.