பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன் னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் உள்ளா ட்சி தேர்தல் தொடர் பாக விவாதிக்க தனது ஆதரவாளர்களுடன் கான்பூர் (உத்தர கண்ட்) சுயேச்சை எம்எல்ஏ உமேஷ் குமாரின் அலுவலகத்தை நோக்கி சென்றார். அங்கு உமேஷ் குமாரின் ஆதர வாளர்களும் கூடி இருந்தனர். விவா திக்க செல்வதாக சென்ற பிரணவ் சிங், உமேஷ் குமாரை நோக்கி திடீரென துப் பாக்கியால் சுட்டார். பதிலுக்கு உமேஷ் குமார் ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இரு தரப்பினரையும் லேசான தடியடி நடத்தி அனுப்பி வைத்தனர். ஆதரவாளர்கள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியதால் கான்பூர் காவல்துறையினர் பாஜக முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங்கை கைது செய்து ஹரித்வார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.