states

தில்லி அமைச்சரையும் வளைத்த பாஜக கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்

ஆம் ஆத்மி தேசிய செயற்குழு உறுப்பினரும், தில்லி அமைச்ச ருமான கைலாஷ் கெலாட் ஞாயிறன்று கட்சி யின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய் தார். பாஜகவின் மிரட் டல் மற்றும் அமலாக் கத்துறை, வருமான வரித்துறை நெருக் கடி காரணமாகவே கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், திங்களன்று கைலாஷ் கெலாட் பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் அக்கட்சி யில் இணைந்தார். தில்லியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் ஆம் ஆத்மியின் தில்லி அரசாங்கத்தில் இருந்து விலகிய இரண்டாவது அமைச் சர் கைலாஷ் கெலாட் ஆவார். முன்ன தாக கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தில்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்து, பகுஜன் சமாஜ் கட்சி யில் இணைந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.