பாட்னா, ஏப்.16- “ராமர் கடவுள் இல்லை, அவர் ஒரு கதாபாத்திரம் மட்டுமே” என்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜிதன் ராம் மாஞ்சி கூறியுள்ளார். ‘ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா’ கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி, அம்பேத்க ரின் பிறந்த நாளையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``ராமர் கடவுள் இல்லை. அவர் கதையில் வரும் ஒரு கதாபாத் திரம். துளசிதாஸ், வால்மீகி ஆகி யோர் அவர்களின் கருத்துக்களை பரப்புவதற்காக உருவாக்கிய ஒரு கதாபாத்திரம்தான் ராமர். துளசிதாஸ், வால்மீகி ஆகி யோரின் எழுத்துக்களில் நல்ல கருத்துகள் நிறைந்திருக்கின்றன. நாங்கள் அந்த இருவரையும் நம்புகிறோமே தவிர, ராமரை அல்ல” என்று தெரிவித்துள்ளார். மேலும், “சபரி கடித்துக் கொடுத்த பழத்தை ராமர் சாப் பிட்டதாக நாங்கள் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நீங் கள் ராமரை நம்புபவர்களாக இருந்தால், நாங்கள் (தலித் மக் கள்) கடித்துக் கொடுத்த பழத்தை சாப்பிட வேண்டாம்... எங்கள் கைப்பட்ட பழத்தையாவது சாப்பி டத் தயாரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், “தலித்து களுக்கு எதிராக பிராமணர்கள் பாகுபாடு காட்டுவதாகவும், இந்த உலகத்தில் பணக்காரர், -ஏழை என இரண்டு சாதிகள் மட்டுமே இருக்கின்றன” என்றும் குறிப் பிட்டுள்ளார்.