states

img

5 மாநிலத் தேர்தலின்போது நன்கொடையாக ரூ. 914 கோடியை வாரிக் குவித்த பாஜக!

புதுதில்லி, அக். 22 -  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக ரூ. 223 கோடியை செலவிட்டுள்ளதாக ஜன நாயக சீர்திருத்தங்க ளுக்கான சங்கம் (Associ ation of Democratic Re forms) அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில், உத்தரப் பிரதேசம், கோவா, உத்தர கண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்க ளில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் செலவிட்ட தொ கைகள் குறித்த விவரங்க ளை ஜனநாயக சீர்திருத் தங்களுக்கான சங்கம் வெளி யிட்டுள்ளது. அதில், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்தமாக ரூ. 470 கோடியே 1 லட்சம் செல விட்டுள்ளதாகவும், சரிபாதி தொகையை ஒரே ஒரு கட்சி (பாஜக) மட்டுமே செல விட்டுள்ளது என்றும் கூறி யுள்ளது. அதாவது, 5 மாநில தேர்தல்களில் பாஜக மட்டும் ரூ. 223 கோடியே 14 லட்சத்தை செலவிட்டுள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்க ளில் பாஜக-வுக்கு அடுத்த படியாக, காங்கிரஸ் ரூ. 102 கோடியே 65 லட்சம் செலவிட்டுள்ளது. பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடி யாக பகுஜன் சமாஜ் கட்சி ரூ. 68 கோடியே 64 லட்சம் செலவு செய்துள்ளது.  5 மாநிலத் தேர்தல்களின் போது பெற்றதாக பாஜக கணக்கில் காட்டியிருக்கும் நன்கொடை மட்டும் ரூ. 914 கோடியே 03 லட்சம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் சம யத்தில், பாஜக உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகள் மொத்தம் 1,441.79 கோடி யை நன்கொடையாக பெற்றுள்ளன. இந்த ஒட்டு மொத்த நன்கொடையிலும், பாஜக மட்டுமே சுமார் 70 சதவிகித நன்கொடையைப் பெற்றுள்ளது.