புதுதில்லி, ஜன. 17 - 2023-ஆம் ஆண்டில் வரவிருக்கும் 9 மாநிலத் தேர்தல் கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக விவா திப்பதற்காக, 2 நாள் தேசிய செயற்குழு கூட்டத்தை, தலை நகர் தில்லியில் பாஜக கூட்டியது. இந்தக் கூட்டத்தில், நிறை வேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் பிரதமர் மோடியை பலவாறாக பாராட்டியுள்ளனர். பிரதமர் மோடி மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளே தகுந்த பதிலடி என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. “பிரதமரை தனிப்பட்ட முறையில் காயப்படுத்த எதிர்க் கட்சிகள் எதிர்மறையான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டன. அதில் மோசமான வார்த்தை மற்றும் எதிர்மறைத் தொனி ஆகியவை பிரதமரை தனிப்பட்ட முறையில் சேதப்படுத்துபவை ஆகும். ரபேல் விவகாரம், பணமதிப்பு நீக்கம், அமலாக்க இயக்குநரகத்தின் பணமோசடி வழக்கு கள், சென்ட்ரல் விஸ்டா திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு என- இந்தப் பிரச்சனைகள் உச்ச நீதிமன்றம் வரை சென்றன. ஆனால், அங்கு சட்டப்பூர்வ பதிலால் அந்தப் பிரச்சனைகள் நிராகரிக்கப்பட் டன. நாட்டின் நலனுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. உலகளாவிய மன்றங்களில் இந்தியாவின் மதிப்பை மோடி உயர்த்தியுள்ளார்” என்று பாஜக-வின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
‘மன் கி பாத்’ போன்ற அரசியல் சாராத தளங்கள் மூலம் சாமானிய மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பாலம் அமைப்பதில் மோடி வெற்றி பெற்றுள்ளார். “கலாச்சார மற்றும் ஆன்மீகப் பிரச்சனையை முன்னெடுத்துச் செல்வ தில் பிரதமரின் பங்கு நிலையானது, திரங்கா யாத்திரை பிரச்சாரம் மற்றும் காசி தமிழ் சங்கமம் என கலாச்சார பாரம் பரியத்தை மீட்டெடுப்பதில் மோடியின் பங்கு பாராட்டுக்கு உரியது. குஜராத்தில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடி யினருக்காக ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களை பாஜக வென்றுள்ளது. இங்கு ஆட்சிக்கு எதிரான நிலையை ஆட்சிக்கு ஆதரவாக மாற்றிய அந்த முடிவுகள், வரவிருக்கும் தேர்தல்களிலும் ‘தாக்கத்தை’ ஏற்படுத்தும் என்றும் தெரி விக்கப்பட்டு உள்ளது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவையும் அரசியல் தீர்மானத்தில் பாராட்டியுள்ளனர்.