புதுதில்லி, செப்.30 - பூமி அதிகார் அந்தோலன் நான்கா வது தேசிய சிறப்பு மாநாடு செப்டம்பர் 26, 27 தேதிகளில் தில்லியில் நடை பெற்றது. இதில் அரசாங்கத்தாலும், கார்ப்பரேட்டுகளாலும் பறிக்கப்படும் நிலம் மற்றும் வனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எதிராகப் போராட அறைகூவல் விடுத்துள்ளது. சிறப்பு மாநாட்டில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தர்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், தில்லி, கேரளம், இமாச்சலப்பிரதேசம், உத்தர்கண்ட், அசாம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்து 70 அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தலைவர்களும் முன்னணி ஊழியர்களும் பங்கேற்றனர்.
விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா, அகில இந்திய தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, அகில இந்திய நிர்வாகி விஜூகிருஷ்ணன், மேதா பட்கர், உல்கா மகாஜன், பிர புல்லா சமண்ட்ராய், தயாமணி பார்லா, டாக்டர் சுனிலம், அரவிந்த் அஞ்சும், மாதுரி, ரோமா திலக், சத்யவான் ஆகி யோர் நிலம் மற்றும் வன உரிமை களுக்கான போராட்டங்களை முன்னெ டுத்துச் செல்லவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினர். மாநாட்டைத் துவக்கி வைத்து ஹன்னன்முல்லா பேசுகையில், “பழங் குடியினர், விவசாயிகள், தலித்து கள், தொழிலாளர்கள், உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப் பட்டிருக்கின்றன. அனைத்து விவ சாயிகள் அமைப்புகளும் நடத்திய வீரஞ்செறிந்த விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக விவசாயி கள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்திட அரசாங்கம் முன்வந்தது. இப்போது நம் நிலங்கள், வனங்கள் மற்றும் இயற்கை வளங்களின் மீதான மக்களின் உரிமைகளைப் பாது காக்கவும் அதேபோன்ற ஒற்றுமை தேவைப்படுகிறது. வரவிருக்கும் காலங்களில் பூமி அதிகார் அந்தோலன் இதற்கான போராட்டங்களை உக்கிரப்படுத்திடும்.” என்று கூறினார்.
43 விழுக்காடு நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு
அடுத்து, உல்கா மகாஜன் பேசுகை யில், “நாட்டிலுள்ள நிலங்களில் 43 விழுக்காட்டிற்கும் அதிகமாக கார்ப்ப ரேட்டுகளுக்கு விற்கப்படும் ஆபத்து இப்போது இருந்து வருகிறது” என்றார். கொள்ளை லாபத்தைக் குறி யாகக் கொண்ட கார்ப்பரேட்டுகள் நம் நிலங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வில்லை, அதற்கும் மேலாக உலக அள வில் புவிவெப்பமயமாதலில் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்திலும் நடவடி க்கைகளில் இறங்கி இருக்கிறார்கள் என்று மேதா பட்கர் கூறினார். “வனப் பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் பழங்குடியினருக்கு அநீதி இழைத் திடும்” என்று மாதுரி கூறினார். அசோக் தாவ்லே நிறைவாகப் பேசுகையில், “இந்திய வரலாற்றில் தெலுங்கானா போராட்டம் நீண்ட காலம் நடைபெற்ற வீரஞ்செறிந்த விவ சாயிகள் போராட்டமாகும். அது நிலப் பிரபுத்துவத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டமாகும். நிலப்பிரபுத்துவத் திற்கு எதிரான போராட்டம் தொடரும் அதே சமயத்தில், பழங்குடியினரின் வன உரிமைகளைப் பறித்திடும் கார்ப்ப ரேட்டுகளுக்கு எதிரான போராட்டம் இப்போது உக்கிரப்படுத்தப்பட்டி ருக்கிறது. கார்ப்பரேட்டுகள்-மனுதர்ம ஆட்சியாளர்களின் கள்ளப்பிணைப்பு க்கு எதிரான போராட்டம் பன்மடங்கு வலுப்படுத்தப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.” என்று தெரி வித்தார்.
தீர்மானங்கள்
வனத்துறை அமைச்சகம், வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்திருப்பதற்கு பூமி அதிகார் அந்தோலன் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் திருத்தங்கள் பழங் குடியினரின் கண்ணியம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு எதிரானவை களாகும். இந்தத் திருத்தங்களுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் உள்ள வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து கிராம சபைகளிலிருந்து அனைத்து அமைப்புகளிலும் பெரிய அளவில் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும்.
அதானிக்காக வளமான வனங்கள் அழிப்பு
மோடி அரசாங்கத்தின் எஜமான ரான அதானிக்கு ஒப்படைப்பதற்காக சத்தீஷ்கரில் உள்ள ஹாஷ்டியோ ஆரண்யா போன்ற வளம் நிறைந்த வனங்களை அழிப்பதை பூமி அதிகார் அந்தோலன் எதிர்க்கிறது. இதற்கெதி ராக பழங்குடியினர் கடந்த 170 நாட் களாக போராட்டம் நடத்தி வரு கின்றனர். இப்போராட்டத்திற்கு பூமி அதிகார் அந்தோலன் தன் ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. சத்தீஷ்கர் அரசாங்கத்தின் காட்டு மிராண்டித்தனமான இந்நடவடிக்கை யை பூமி அதிகார் அந்தோலன் கண்டிக்கிறது. நாட்டில் ஜனநாயக இயக்கங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒடுக்கு முறை நடவடிக்கைகளை பூமி அதி கார் அந்தோலன் கண்டிக்கிறது. இத்த கைய பாசிஸ்ட் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தை பூமி அதிகார் அந்தோலன் எச்சரிக்கிறது.
எதிர்கால நடவடிக்கைகள்
1. பூமி அதிகார் அந்தோலனுடன் இணைந்துள்ள சங்கங்கள் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவிலான கூட்டங்கள் நடைபெற்று எதிர்கால போராட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும்.
2. மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று வனங்கள், நிலம், கனிம வளங்கள், தண்ணீர் மற்றும் தொழிலாளர் சட்டங்கள், தொழி லாளர் விரோத சட்டங்களாக மாற்றப் பட்டிருப்பது ஆகியவற்றிற்கு எதிராக மகத்தான முறையில் இயக்கங்கள் நடைபெறும்.
3. ஜனவரி 30 அன்று நஃப்ரத் சோடோ சம்விதான் பச்சாவோ என்னும் அமைப்பின் சார்பில் தில்லி யில் மாபெரும் பேரணி நடை பெறுகிறது. அதற்கு ஆதரவு அளித்திட அறைகூவல் விடுக்கப்படும். சட்ட மையம் அமைத்து உதவி
4. நிலப் பிரச்சனைகள் சம்பந்த மாகப் போராடும் இயக்கங்களுக்கு உதவிட பூமி அதிகார் அந்தோலன் சார்பில் சட்ட மையம் அமைக்கப்படும்.
5. பூமி அதிகார் அந்தோலனுக்காக ஒரு செயலகம் உருவாக்கப்படும்.
கோரிக்கை சாசனம்
1. கார்ப்பரேட்டுகள் நிலங்களைக் கைய கப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். மக்களை சட்டவிரோத மாக நிலங்களிலிருந்து வெளி யேற்றக்கூடாது. விவசாயிகளின் நில உரிமைகளை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
2. வன உரிமைகள் சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் கறாராக அமல் படுத்த வேண்டும். இதனைச் செய்வத ற்கு காலவரையறையை ஓராண்டாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
3. வனப்பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள விதி களையும் திருத்தங்களையும் விலக்கிக்கொள்ள வேண்டும்.
4. கடற்கரை நிலங்களில் மீன்பிடித் தொழிலாளர்களின் பாரம்பரிய உரிமைகளை அங்கீகரித்து, பதிவு செய்ய வேண்டும்.
5. மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தைக் கறாராக அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை விவசாயம், மீன் வளம், பால்வளம் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளுடனும் இணைக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை நாளொன்றுக்கு 600 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.
6. நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் கால்நடைச் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். கால்நடை வர்த்தகச் சந்தையைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
7.விவசாயிகளிடமிருந்து கால்நடை களை மாநில அரசாங்கங்களே வாங் குவதற்கு வகைசெய்ய வேண்டும்.
8. பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் கொலைகள் மேற்கொள்ளப்படு வதற்கும், வன்முறை வெறியாட்டங் களில் ஈடுபடுவதற்கும் எதிராக சட்டப் பூர்வமாக நடவடிக்கை எடுப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும் .
9. அனைத்து வேளாண் பொருள் களுக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி உற்பத்திச் செலவினத்துடன் 50 சதவீதம் உயர்த்தி, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
10. குறைந்தபட்ச ஊதியத்தை நாளொன்றுக்கு 600 ரூபாயாக உத்தரவாதம் செய்ய வேண்டும். ‘லேபர் கோடுகள்’ (‘labour codes’) என்கிற நான்கு தொழிலாளர் விரோத சட்டங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.
11.விவசாயிகளின் கடன்களைத் தள்ளு படி செய்ய வேண்டும்.
12.60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் மற்றும் இரண்டு ஹெக்டேர் நிலத் திற்கும் குறைவாக வைத்திருக்கும் சிறிய மற்றும் விளிம்புநிலை விவ சாயிகள் அனைவருக்கும் மாதந் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதி யம் வழங்க வேண்டும்.
13. விவசாயத்தைக் கார்ப்பரேட்மயம், ஒப்பந்தமயமாக்கக்கூடாது. விவ சாய உற்பத்தியை கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்துவதற்குத் தடை விதித்து, கூட்டுறவு விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
14.சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்துசெய்ய வேண்டும். விதைகள், ரசாயன உரங்கள், மின்சாரம், பாச னம் மற்றும் இடுபொருள்கள் ஆகிய வற்றிற்கு விவசாயிகளுக்கு மீண்டும் மானியம் வழங்க வேண்டும்.
15.வேலையின்மையைக் கட்டுப் படுத்தி, வேலையளிக்கும் உரிமை யை அடிப்படை உரிமையாக்க வேண்டும்.
16. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 17. பொது விநியோக முறை வலு வாக அமல்படுத்தப்படுவதை உத்தர வாதம் செய்ய வேண்டும்.
18.சுகாதாரம் மற்றும் கல்வியை தனி யார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.
19. நாட்டின் பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கும் தேசிய பணமாக்கும் திட்டத்தை (National Monetisation Pipeline) ரத்து செய்ய வேண்டும்.
(ந.நி.)