புதுதில்லி,மார்ச் 24- ஒன்றிய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் செயலிகளை முடக்கியுள்ளது என ஒன்றிய வர்த்தகம்- தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மக்களவையில் இணை யமைச்சர் சோம் பிரகாஷ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மாநிலத்தின் இறை யாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி இந்த மொபைல் செய லிகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணை யத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன், 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 69A இன் கீழ், ஒன்றிய அரசு இதுவரை 320 மொபைல் பயன்பாடுகளை முடக்கியுள் ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 49 மொபைல் செயலிகள் மீண்டும் தடை செய்யப்பட்டன என்றார். மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2021 வரை சீனா விடமிருந்து 2.45 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முத லீட்டை இந்தியா பெற்றுள் ளது என்று தெரிவித்துள்ளார்.