states

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

புதுதில்லி, மார்ச் 9- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனு பவித்து வந்த பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த 32 ஆண்டாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும் இந்த வழக்கில் நளினி, ரவிச்சந்தி ரன் உள்பட பலரும்  சிறை தண்டனை அனு பவித்து வருகின்றனர். திமுக அரசு பதவி ஏற்றதற்கு பின்னர்  பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் விடுப்பு தொடர்ந்து வருகிறது.  இந்த நிலையில் பரோலுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதால், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை என்றும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன்  மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு மனுத் தாக்கல் செய்யப் பட்டது. அதில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.  இந்த விசாரணையின் போது, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும் பேரறிவாளன் மனு வுக்கும் ஆளுநர் கருத்துக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும்  உச்சநீதிமன்றம் தெரி வித்திருந்தது.  மார்ச் 9 அன்று பிற்பகல் உச்சநீதி மன்றத்தில் பேரறிவாளனின் ஜாமீன் கோரும் மனு  மீதான விசாரணை நடை பெற்றது. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க ஒன்றிய அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால்  விசாரணைக்குப் பின்னர், பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டது.