புதுதில்லி, ஆக. 21 - இளம்பெண்ணின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், குஜராத் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் என்ன தான் நடக்கிறது?என்றும் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப் பட்ட அவர், கருவுற்ற நிலையில், தன் கருவைக் கலைக்க அனுமதி கோரி ஆகஸ்ட் 7-ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை, ஆகஸ்ட் 8 அன்று விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், கரு வின் வளர்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மருத்துவக் குழு அமைத்து உத்தரவிட்டது. மருத்துவக் குழுவும் ஆய்வுசெய்து, கடந்த ஆகஸ்ட் 10 அன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவைக் கலைப்பதால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த வழக்கை ஆகஸ்ட் 11 அன்று மீண்டும் விசாரித்த குஜராத் உயர் நீதி மன்றம், காரணமே இல்லாமல் 12 நாட் களுக்கு வழக்கைத் தள்ளி வைத்தது. பின்னர், திடீரென ஆகஸ்ட் 17 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் மனு தள்ளு படி செய்யப்பட்டதாக குஜராத் உயர் நீதிமன்ற இணையதளத்தில் அறிவிக்கப் பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப் பட்ட இளம்பெண், கரு 28-ஆவது வாரத்தை நெருங்குவதாகவும், காரணமின்றி, குஜ ராத் உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளு படி செய்துவிட்டதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக மருத்துவ பரிசோ தனை செய்ய உத்தரவிட்டது. கடந்த சனிக் கிழமை இந்த வழக்கு விசாரணை நடை பெற்றபோதே, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனு மீது முடிவெடுக்க காலதாமதம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப் பட்டு விட்டதாகவும் குஜராத் உயர் நீதி மன்றத்தை, உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. வழக்கை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், அதேநாளிலேயே, இளம்பெண்ணின் வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், கருவைக் கலைக்கத் தடை விதித்தது. இந்நிலையில், இளம்பெண்ணின் மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. முன்னதாக, குஜராத் உயர் நீதி மன்றத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. உச்சநீதிமன்றத்தின் உத்தர வுக்கு எதிராக இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. இது அரசியலமைப்பு தத்துவத்திற்கு எதி ரானது என்பது தெரியாதா? என்று நீதிபதி கள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயன் அமர்வு, குஜராத் உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? என்றும் காட்டமாக கேட்டனர். அப்போது, குஜராத் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவில் எழுத்துப் பிழை ஏற்பட்டதாகவும், அது கடந்த சனிக்கிழமை சரிசெய்யப்பட்டுவிட்டதாக வும், அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் வாதிட்டார். உத்தர வை திரும்பப்பெறும்படி மாநில அரசு சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் சமாளித்தார்.