states

img

ராமர் கோயில் விவகாரம் தேர்தலில் பாஜகவுக்கு உதவாது!

புதுதில்லி, பிப்.5- அயோத்தி தொகுதியில் இம் முறை பாஜகவுக்கு வெற்றி கிடைக் காது; ராமர் கோயில் கட்டுவ தாலேயே மக்கள் பாஜக-வுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள் என்று சமாஜ்வாதி கட்சி வேட்பா ளர் தேஜ் நாராயணன் பாண்டே கூறி யுள்ளார். உ.பி. மாநிலத்திற்கு 7 கட்டங்க ளாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள் ளது. இதில், ஐந்தாம் கட்டத் தேர் தல் நடைபெறும் தொகுதிகளின் பட்டியலில் அயோத்தி உள்ளது. இங்கு பிப்ரவரி 27 அன்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இங்கு, பாஜக சார்பில் தற்போ தைய எம்எல்ஏ வேத் பிரகாஷ்  குப்தாவே மீண்டும் களமிறக்கப் பட்டுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி, முன்னாள் அமைச்சர் தேஜ் நாராயணனை வேட்பாளராக அறி வித்துள்ளது. அயோத்தி தொகுதி யில், 1991 முதல் 5 முறை எம்எல்ஏ- வாக வெற்றிபெற்று வந்த லல்லு சிங் என்பவரை 2012-ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடித்தவர்தான் தேஜ் நாராயணன். அவரைத்தான் வேத் பிரகாஷ் குப்தாவுக்கு எதி ராக சமாஜ்வாதி கட்சி நிறுத்தியுள்ளது.

 “அயோத்தியில் சாலைகள் மற்றும் விமான நிலைய மேம்பாடு என்ற பெயரில் ராமரின் ‘பிரஜா’ சொத்துக்களில் புல்டோசர்களை இயக்க ஆதித்யநாத் அரசு விரும்பு கிறது. அதை நாங்கள் எதிர்க்கி றோம். எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நாங்கள் அயோத்தி நகராட்சியில் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரியைத் தள்ளுபடி செய்வோம். அனைவருக்கும் இல வச மின்சாரத்தை உறுதி செய் வோம்” என்று தேஜ் நாராயணன் தீவிர வாக்குசேகரிப்பில் இறங்கி யுள்ளார். மேலும், ராமர் கோவில் விவகா ரம் தொடர்பான கேள்வி ஒன்றுக் கும் பதிலளித்துள்ள அவர், “இந்த விவகாரம் பாஜக-விற்கு சாதக மாக அமையாது. ஏனெனில், நாங் கள் மட்டுமென்ன ராமர் கோவி லுக்கு எதிராகவா இருக்கிறோம்..? நானும் ஹனுமன் கர்ஹி அன்று அனுமனுக்கான சலிசா கூறுகி றேன். எனவே, இங்கு யாரும் ராமர் கோவிலுக்கு எதிராக இல்லை. வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுகாதாரம் ஆகியவையே எங்களின் பிரச்சனை. ஆனால், பாஜகவோ கோவில், கப்ரிஸ்தான் மற்றும் ஷம் ஷான் பற்றி மட்டுமே பேசுகிறது.  பாஜக அரசு இந்த பிரச்சனை களை சரி செய்ய முயற்சிக்க வில்லை. அதில் அவர்கள் தோற்று விட்டார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.