states

img

பாஜக ஆளும் ஒடிசாவிலும் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல்

பாஜக ஆளும் ஒடிசாவிலும்  கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல்

70க்கும் மேற்பட்ட பஜ்ரங் தளம் குண்டர்கள் அட்டூழியம்

மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆன பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. கேரள கன்னியாஸ்திரிகள் கடந்த வாரம் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் பகுதியில் ஆள்கடத்தல், கட்டாய மதமாற்றம் குற்றச்சாட்டில் கேரளா வைச் சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தளத்தின் தூண்டுதல் காரணமாக சத்தீஸ்கர் காவல்துறை இந்த சம்பவத்தை அரங்கேற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தீவிர சட்ட போராட்டம் நடத்தினர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம்  எழுதினார். இதன் விளைவாக அப்பாவி  கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழு வதும் கண்டனங்கள் குவிந்தன. ஒடிசா இந்நிலையில், பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஒடிசாவிலும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மீதும் பஜ்ரங் தளம்  இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள னர். ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் அருகே கங்காதர் கிராமத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒரு  இரங்கல் பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு கங்காதர் தேவாலயம் மற்றும் பாலசோர் மறைமாவட்டத் தின் சார்பில் கத்தோலிக்க பாதிரியார்கள், 2 கன்னியாஸ்திரிகள், ஒரு கிறிஸ்தவ போதகர் உள்ளிட்ட 5 பேர் சென்றனர்.  இரங்கல் நிகழ்ச்சியை முடித்த பின்பு இரவு 9 மணியளவில் கங்காதர் கிராமத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு குறுகிய காட்டுப் பாதையில் குவிந்து இருந்த சுமார் 70 பஜ்ரங் தளம் குண்டர்கள் 2 பாதிரியார்கள், 2 கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவ போதகர் என 5 பேர் மீதும் கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.  கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இந்துத்துவா  கும்பலிடம், “பாதிரியார்கள், கன்னியாஸ்திரி கள் பிரார்த்தனைக்காக அழைக்கப்பட்ட வர்கள்” என தெளிவுபடுத்தி மன்றாடிய போதும் பஜ்ரங் தளம் குண்டர்கள் தாக்குதலை நிறுத்த வில்லை. பின்னர் 45 நிமிடங்களுக்குப் பின் வந்த காவல்துறையினர் 5 பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவத்தில் காயமடைந்த கிறிஸ்தவ போதகர் லிஜோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில்,”சுமார் 70க்கும்  மேற்பட்ட பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இந்துத்துவா கும்பல் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. நாங்கள் வந்த இருசக்கர வாக னத்தையும் அடித்து நொறுக்கினர். குறிப்பாக ஊடகவியாளர் முன்னிலையில் எங்களை உடல்  ரீதியாக தாக்கினர். மேலும் “பிஜேடி (பிஜு  ஜனதா தளம்) ஆட்சி  நாட்கள் முடிந்து விட்டன. இப்போது பாஜக ஆட்சி. இனி நீங்கள்  யாரையும் கிறிஸ்தவர்களாக உருவாக்க முடி யாது” என்று கூறிக்கொண்டே தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தினர். எங்களது மொபைல் போன்களை பறித்துச் சென்றனர். காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்த பின்பும் எங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தது” என அவர் கூறினார். சத்தீஸ்கரை தொடர்ந்து ஒடிஷாவிலும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளன.