states

img

பாஜக ஆளும் ஒடிசாவில் கொடூரம்: பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி

பாஜக ஆளும் ஒடிசாவில் கொடூரம்: பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி

புவனேஸ்வரம் பாஜக ஆட்சியில் அமர்ந்த  பின்பு ஒடிசா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக மோசமான அளவில்  அதிகரித்து வருகிறது. கடந்த மாதம்  ஒரே வாரத்தில் 3 பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் நிகழந்தன. இதில் ஒரு சிறுமி படுகொலை செய்யப்  பட்டார். தொடச்சியாக பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வரு வதால், அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாட்டு அரசாங்கங்கள் தங்கள் நாட்டு  குடிமக்களை,”ஒடிசா மாநிலத்திற்கு செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தி யுள்ளன. இந்நிலையில், ஒடிசாவின் பால சோர் அருகே துறை தலைவரின் பாலி யல் துன்புறுத்தலால் கல்லூரி வளா கத்தில் தீக்குளித்த மாணவி ஆபத்தான  நிலையில் காப்பாற்ற முயன்ற மாணவர்  படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரு கிறார்.  பாலசோரில் உள்ள பக்கீர் மோகன்  கல்லூரியில் ஒருங்கிணைந்த பி.எட்.  படிப்பு படித்து வந்த மாணவி ஒருவ ருக்கு, அவரது துறைத் தலைவரான சமீர் குமார் சாஹு என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்  துள்ளார். தான் சொல்வதை கேட்கா விட்டால், எதிர்காலத்தை பாழாக்கி விடு வதாகவும் மாணவியை மிரட்டியுள் ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த  மாணவி ஜூலை 1ஆம் தேதி கல்லூரி யின் உள்விசாரணைக் குழுவிடம் புகார்  அளித்துள்ளார். 7 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்  படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதி யளித்துள்ளது. ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்ப வத்தன்று மாணவி தன்னைச் சந்தித்து,  மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகக் கூறியதாகவும், துறைத் தலைவரை அழைத்து விசாரித்தபோது அவர் குற்றச்சாட்டுகளை மறுத்ததாகவும், மாணவி தனது புகாரில் உறுதியாக இருந்ததாகவும் கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் போராட்டம் இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை  தலைவர் மீது கல்லூரி நிர்வாகம் நட வடிக்கை எடுக்காததைக் கண்டித்து,  சனிக்கிழமை அன்று சக மாணவர்களு டன் கல்லூரி வாயிலில் பாலியல் துன்பு றுத்ததலால் பாதிக்கப்பட்ட மாணவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கல்லூரி முதல்வர் அலுவலகம் அருகே ஓடிய மாணவி, தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்  துக்கொண்டார். தீப்பற்றிய நிலையில் கல்லூரி வளாகத்தில் ஓடும் அவரது  காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைக் காப் பாற்ற முயன்ற சக மாணவர் ஒரு வருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த கோர சம்பவத்தில், மாணவிக்கு 95% தீக்காயங்களும், அவரைக் காப் பாற்ற முயன்ற மாணவருக்கு 70% தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளன. இருவரும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அம்  மாநில உயர்கல்வித் துறை, துறைத் தலைவர் சமீர் குமார் சாஹு மற்றும்  முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இரு வரையும் பணியிடை நீக்கம் செய்துள் ளது. மேலும் துறைத் தலைவரை காவல்துறை கைது செய்து தீவிர விசா ரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.