states

எம்.பி.க்கள் இடைநீக்கம் : சிபிஎம் கடும் கண்டனம்

புதுதில்லி, ஜூலை 27- நாடாளுமன்றத்தின் ஜனநாயக செயல்பாடுகள் மீது தாக்குதல் தொடுத் திருப்பதை ஒன்றிய அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் இதற்கெதிராக மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மக்களவையில் நான்கு உறுப்பி னர்களும், மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு உறுப்பினர்கள் உட்பட 19 உறுப்பினர் களும் தொடர்ந்து அடுத்தடுத்த நாட் களில் இடைநீக்கம் செய்யப் பட்டிருப்பது, நாடாளுமன்றத்தின் ஜனநாயக செயல்பாடுகள் மீது ஏவப்பட்டுள்ள பலத்த அடியாகும்.

இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கு இருந்துவந்த சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகள் மீது ஏவப் பட்டுள்ள தாக்குதலுமாகும். மோடி அரசாங்கம், மக்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டுக்கொண்டி ருப்பதன் மீதோ, விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவற்றால் மக்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் மீதோ மற்றும் மக்க ளின் பிரச்சனைகள் மீதோ விவாதிப்ப தற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடா ளுமன்ற நடத்தை விதிகளின் கீழ் தீர்மா னங்கள் கொண்டுவந்தால் அதனை ஏற்க உறுதியாக மறுத்துக்கொண்டிருக் கிறது.

 இவ்வாறாக மக்களின் நலன்கள் குறித்த பிரச்சனைகளை விவாதித் திட உயர்மட்ட அளவிலான அமைப் பாக விளங்கும் நாடாளுமன்றத்தின் நட வடிக்கைகளை அழித்துக்கொண்டி ருப்பதற்கு ஒன்றிய மோடி அரசாங்கமே முற்றிலும் பொறுப்பாகும். மோடி அரசாங்கம் திட்டமிட்டு நாடா ளுமன்றத்தின் மதிப்பைக் குறைத்துக் கொண்டிருக்கிறது, எதிர்க்கட்சி உறுப் பினர்களின் குரலைத் தடுத்துக்கொண்டி ருக்கிறது.  இதற்கெதிராகவும், ஜனநாயகத் தைப் பாதுகாத்திட ஓர் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் மக்களின் கருத்தை அணிதிரட்டுவதன் மூலமும் இதனைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.  இவ்வாறு அரசியல்  தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.  (ந.நி.)