states

img

மாதவிடாய் பற்றி பேசியதால் சட்டமன்ற புனிதம் கெட்டுவிட்டதாம்!

இடா நகர், மார்ச் 17- மாதவிடாய் என்பது ஒரு அழுக்கு;  அதுதொடர்பான மசோதாவைக் கொண்டு வந்ததன் மூலம் அருணாச்சல பிரதேச சட்ட மன்றத்தின் புனிதம் கெட்டு விட்டது என்று பாஜக எம்எல்ஏ லோகம் தஸ்ஸார், பெண் மையை இழிவுபடுத்தியுள்ளார். அருணாசலப் பிரதேச சட்டமன்றத் தில் காங்கிரஸ் உறுப்பினர் நினோங் எரிங் பேசுகையில், மாதவிடாயின் முதல் நாளின் போது பெண்களுக்கு விடுமுறை அளிக் கப்பட வேண்டும் என்றும் அதற்கான மசோ தாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கேரளா, பீகார் போன்ற மாநிலங்க ளில் நடைமுறையில் இருக்கும் இந்த சட்டங்கள் பெண்களுக்கு மிக உதவியாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போதுதான், கோலோரியாங் தொகுதியின் பாஜக எம்எல்ஏ லோகம் தஸ்ஸார் குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித் துள்ளார்.

‘புனிதமான சட்டப்பேரவை யில் இது போன்ற அழுக்கான விஷ யங்கள் (லிட்ரா சீஸ்) குறித்து பேசுவது முறையல்ல’ என்று ஆத்திரமடைந்துள் ளார். “மாதவிடாய்க் காலங்களில் பெண் கள் ஆண்களோடு அமர்ந்து உணவு  உண்பதற்கு நியிஷி பழங்குடியின மக்கள் கூடத் தடை விதித்திருக்கிறார்கள்” என் றும் ஆவேசப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏ தஸ்ஸாரின் இந்த எதிர்ப்புக்கு, அருணாச்சலப் பிரதேசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் அலோ லிபாங்கும் அடி பணிந்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ நினோங் எரிங், அவரது தீர்மானத்தை திரும்பப் பெறவேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார்.  இந்நிலையில், பாஜக எம்எல்ஏ தஸ்ஸாரின் பேச்சுக்கு அருணாச்சல பிர தேச பெண்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கனி நடா மாலிங் கண்ட னம் தெரிவித்துள்ளார். “மாதவிடாய்க் காலத்தில் பெண்க ளுக்கு விடுமுறை அளிப்பதில் தங்க ளுக்கு எதிர்க் கருத்து இருப்பினும், சட்டப் பேரவை உறுப்பினர்கள், அதைச் சரி யான புரிதலுடன் கையாண்டிருக்க வேண் டும். கொச்சை வார்த்தைகளில் பெண் களின் இயற்கையான உடல் சார்ந்த செயல்பாடுகளை குறிப்பது அவர்களை அவமதிப்பதாகும். மாதவிடாய் ஒன்றும்  தீண்டத்தகாத ஒன்றல்ல. ஆகையால், மரியாதைக்குரிய சட்டப்பேரவை உறுப் பினர்கள், சட்டப்பேரவையில் வார்த்தை களை கவனத்துடன் பயன்படுத்த வேண் டும்” என்று கூறியுள்ளார்.