states

img

அராம்கோவின் முடிவு ஆபத்தானது; ஐ.நா.சபை

ஐ.நா.சபை: சவூதி அரேபிய அரசின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ, புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை விரிவு படுத்த எடுத்துள்ள முடிவு மனித உரிமைக ளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அந்நிறுவனத்திற்கு ஐ.நா நிபுணர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய அளவிற்கு கொண்டுவர இலக்கு வைத்திருப்பதாக ஐ.நா. தெரி வித்திருந்த நிலையில்,  தற்போது  காலநிலை மாற்றத்திற்கு காரணமான புதைபடிவ எரி பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க எடுத் துள்ள முடிவு உலக சுற்றுச்சூழலை மேலும் ஆபத்தில் தள்ளும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சவூதி அராம்கோவின் இந்த முடிவு ஐ.நா. உறுப்பு நாடுகள் எடுத்த, ‘ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உரிமையைப் பேணுவது’ என்ற முடிவிற்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற் படுத்தும்; மேலும் இது காலநிலை மாற்றத்தால் உருவாகியுள்ள மனித உரிமை அச்சுறுத்தலில் இருந்து உலக மக்களைப் பாதுகாக்க 2015 ஆம் ஆண்டு கையெழுத்தான பாரீஸ் சர்வதேச உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் கணக்கின்படி மற்ற எண்ணெய் நிறுவனங்க ளைக் காட்டிலும், ஒரு நாளைக்கு 11.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய்களை சவூதி அராம்கோ நிறுவனம் உறிஞ்சி எடுக்கிறது.