states

img

பிஷப் இல்லங்களில் நுழையும் பாஜக: சூழ்ச்சி மிகுந்த அரசியல் நாடகம்

திருவனந்தபுரம், ஏப்.11- கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை தாக்கும் பாஜக வன்கொடுமை களுக்கு எதிராக நாடு  முழுவதும் போராட்டங்கள் தீவிர மடைந்துள்ள நிலையில் பாஜக புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. ஈஸ்டர் நாளில், ஆதரவைக் கோரி பிஷப் இல்லங்கள் உட்பட பாஜக வினர் ஏறி இறங்குகிறார்கள். இது அர சியல் நோக்கம் கொண்டதல்ல என்று  அறிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணி யில் உள்ள உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. தில்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கதீட்ரலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். சீரோ மலபார் ஃபரிதாபாத் பேராயர் மார் குரியாகோஸ் பர்னிகுளங்கரா, தில்லி பேராயர் அனில் குயெட்டோ மற்றும் பலரை சந்தித்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லத்தீன் சபா தலைமையகத்திற்கு ஒன்றிய இணை அமைச்சர் வி.முரளீதரன் சென்றார். கொச்சியில் பாஜக தலைவர்கள், சீரோ மலபார் சபா மேஜர் ஆர்ச் பிஷப் கர்தினால் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி மற்றும் தலச்சேரி பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி ஆகியோரை சந்தித்தனர்.

தாக்குதல்களுக்கு பாஜக ஆதரவு

நாட்டில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களுக்கு பாஜக மறைமுக ஆதரவைக் கொடுக்கிறது  என்று சந்தே கிப்பதாக ஆர்த்தடாக்ஸ் சர்ச் தலைவர்  பேசிலி யோஸ் மார்தோமா மாத்யூஸ்- III கூறுகிறார். தில்லியில் உள்ள ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை தெரிவித்துள்ளார். பல இடங்களில் பாஜகவினர் மசூதிகளை அழித்து வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. தாக்குதல்களைக் கண்டிக்க அவர்கள் தயாராக இல்லை. பாஜக அரசின் சமாதானக் கொள்கையை கிறிஸ்தவ தேவாலயங்கள் சந்தேகித் தால், அவர்களைக் குறை சொல்ல முடி யாது. தாக்குதல்களில் இருந்து கிறிஸ்த வர்களை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும். பிரதமருடனான சந்திப்பின் போது அரசியல் பேசப்படவில்லை என கத்தோலிக்க ஆயர் தெரிவித்துள்ளார்.