states

img

விழிஞ்ஞம் துறைமுக திட்டத்தை தடுக்கும் முயற்சி

போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைக்க வேண்டுகோள்

மீனவர்களின் கண்ணீரை அரசு துடைக்கும் 

திருவனந்தபுரம், நவ.29- விழிஞ்ஞம் திட்டம் எந்த அமைச்சருக்கோ, எம்எல்ஏவுக்கோ தங்களது வீடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கானதல்ல, எந்த ஒரு மீனவரின் கண்ணீரையும் அரசு வேடிக்கை பார்க்காது, போராட்டத்தை கைவிட்டு அரசுடன் ஒத்துழைக்குமாறு மீனவர்களை அமைச்சர் அப்துர் ரஹிமான் கேட்டுக்கொண்டார். விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் - கருத்தரங்கு மற்றும் நிபுணர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர், அரசின் விட்டுக்கொடுத்தலுக்கு எல்லை உண்டு. இங்கு நடத்தப்படுவது போராட்டமல்ல போராட்டத்திற்கு மாற்றான வழி முறையாகும். ஒரு நாட்டுக்குத் தேவையான கட்டுமானப் பணிகளைத் தடுப்பது தேசத் துரோகக் குற்றமாகக் கருதப்பட வேண்டும். பிரச்ச னையை ஆய்வு செய்து தீர்வுகளை பரிந்துரைத்து அரசு முன்னேறி வரு கிறது. எந்த மீனவரின் கண்ணீரையும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது.  இது குறித்து மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. துறைமுகம் எப்படியும் வரும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு, விமான நிலையங்களின் விரி வாக்கம், கெயில் பைப் லைன் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளில் அரசு  கடைப்பிடிக்கும் அணுகுமுறையை இந்த நாடு கண்டு வருகிறது. நமக்கு மகிழ்ச்சியான நாடு வேண்டும். நிலைமையை புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இ.பி.ஜெயராஜன் வேண்டுகோள்

திருவனந்தபுரம், நவ.29- கேரள மாநிலத்தின் வளர்க் சிக்கு பெரிதும் உதவும் விழிஞ்ஞம்  துறைமுகத் திட்டத்தைத் தடுக் கும் நடவடிக்கைகளில் இருந்து போராட்டக்காரர்கள் அவசரமாக திரும்பிச் செல்ல வேண்டும் என்று  இடது ஜனநாயக முன்னணி அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கேட் டுக் கொண்டார். கேரளாவின் வளர்ச்சிக்கு அடிப்படைத் துறைகளின் வளர்ச்சி முக்கியமானது. அதில் விழிஞ்ஞம் துறைமுகம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இடது ஜனநாயக முன்னணி இந்த திட்டத்தை உல கின் துறைமுக வரைபடத்தில் ஒரு  குறிப்பிடத்தக்க திட்டமாக பார்த்  துள்ளது. எனவே, கடந்த அரசாங்  கத்தின் பலவீனங்களை முடிந்த வரை நிவர்த்தி செய்து, போர்க் கால அடிப்படையில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவ டிக்கைகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டன. கேரளாவின் கனவுத் திட்டங்க ளில் ஒன்றான இதைத் தகர்க்கும் முயற்சிகள் பல்வேறு கட்டங்க ளாக எழுந்துள்ளன. எல்லாவற் றிற்கும் மேலாக, அவற்றை செயல்  படுத்துவதற்கான நடவடிக்கை கள் இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் சிலர் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத முழக் கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து புகார் களையும் அரசு பரிசீலித்து நியா யமான புகார்களுக்கு தீர்வு கண்  டுள்ளது. அந்த நிலையில், உள்  நோக்கம் கொண்ட சிலர், திட்டத்  தையே ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத் துள்ளனர். இதை கேரளாவின் வளர்ச்சியை விரும்பும் எவராலும் ஏற்க முடியாது. இதனுடன், கேரளாவின் கடற்  கரையை அமைதியான வாழ்க்கை யிலிருந்தும் சுமூகமான உறவு களிலிருந்தும் மாற்றுவதற்கு ரக சிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த விச யங்கள் அனைத்திலும் முழு எச்ச ரிக்கையுடன் செயல்பட வேண்டும் என எல்.டி.எப் ஒருங்கிணைப்பா ளர் தெரிவித்துள்ளார்.