states

img

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு!

அகமதாபாத், மார்ச் 1- கொள்முதல், பயன்பாடு, செல வீனங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்ப டையில் தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது பால் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வகை யில், சமீபத்தில் திருமலா, ஹெரிடேஜ், ஜெர்சி, டோட்லா உள்ளிட்ட நிறு வனங்கள், பால் விலையை லிட்ட ருக்கு ரூ. 2 முதல் 4 வரை உயர்த் தின. கொரோனா பெருந்தொற்று சம யத்தில் மக்கள் நலன் கருதி விலை யேற்றம் செய்யாமல் இருந்ததாக வும், தற்போது விலையை உயர்த் தும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தனி யார் நிறுவனங்கள் தெரிவித்தன. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் விற்பனை நிறுவனமான அமுல் நிறுவனமும், அதன் அனைத்து வகையான பாலின் விலையையும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை  உயர்வு மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி “குஜராத்தின் அகமதா பாத் மற்றும் சவுராஷ்டிரா சந்தை களில், அரை லிட்டர் ‘அமுல் கோல்டு’ பாக்கெட் மற்றும் அதன் ‘ப்ரெஷ் கிரீம் மில்க்’ ஆகியவற்றின் விலை ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. ‘அமுல் தாஜா’ அல்லது ‘டோனுட் மில்க்’ வகை அரை லிட்டர் ரூ.24, அமுல் சக்தி ரூ.27 என உயர்த்தப்பட்டுள்ளது. இது வரை, அமுல் கோல்ட்டின் ஒரு பாக்கெட் அதன் ரகத்தைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.58 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல், அமுல் தாஜா அல்லது டோனுட் பால் ஒரு லிட்டர் 48 ரூபாய் விற்கப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு தொடர்பான அறிக்கையை, பால் மற்றும் பால் பொருட்களுக்கான அமுல் பிராண்டை சந்தைப்படுத்தும் குஜ ராத் பால் சந்தைப்படுத்தல் கூட்ட மைப்பு (GCMMF)வெளியிட்டுள்ளது.