states

img

ஆந்திர துணை முதல்வரானார் பவன் கல்யாண் அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு

ஆந்திர மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள தெலுங்குதேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி கடந்த  12 அன்று பொறுப்பேற்றது. 4ஆவது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பொ றுப்பேற்ற நிலையில், அவருடன் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் உள்ளிட்ட 25 அமைச் சர்களும் பதவி ஏற்றனர். இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் (பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, வனம்) பதவி வழங்கப்பட்டுள்ளது. நாரா லேகேஷுக்கு மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையும், கிஞ்ஜரப்பு அட்சன்நாயுடுவுக்கு வேளாண்மை, கூட்டு றவு மற்றும் கால்நடை, மீன் வளம், பால் வளத்துறையும், கொல்லு ரவீந்திராவுக்கு சுரங்கம், புவியியல், கலால் துறையும், நடந்திலா மனோகருக்கு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையும், பொங் குரு நாராயணாவுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையும், அனிதா வங்கலப்புடிக்கு உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையும் வழங்கப்பட்டுள்ளது.