states

img

அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1000 கோடியில் சாலை

அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1000 கோடியில் சாலை

லக்னோ, டிச. 5 - அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு பக்தர்கள் சொகு சான முறையில் சென்றுவருவதற்கு ரூ.1000 கோடியில் சாலைகள் அமைக்க, ஆதித்யநாத் தலைமையி லான உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத் தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத் தில் ராமர் கோயில் கட்டுமானப் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகின் றன. 2019-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், கோயில் கட்டுமானத்திற்கான பூர்வாங்க பணி கள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஆகஸ்ட் 5, 2020 அன்று கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று துவக்கி வைத்தார். 1,800 கோடி ரூபாய் செலவில் தயா ராகும் இக்கோவிலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக கோயில் கட்டுமானப் பணிகளை மட்டு மன்றி, சாலை உள்ளிட்ட உட்கட்டமை ப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் அரசு தீவிரமாகி உள்ளது.

அதனொரு பகுதியாகவே, அயோத்தி ராமர் கோயி லுக்கு பக்தர்கள் சொகுசாக சென்றுவர ரூ. 1,000 கோடி மதிப்பில் சாலைக் கட்டு மான பணிகளுக்கு உ.பி. பாஜக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. “ராம ஜென்ம பூமிக்குச் செல்லும்  அனைத்துச் சாலைகளும் விரிவு படுத்தப்பட்டு, பக்தர்கள் வசதியாக சென்று வரும் சூழலை உருவாக்க இந்த மெகா திட்டம் ரூ. 1000 கோடி யில் முன்னெடுக்கப்படுகிறது. திட்டத் திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதி யில் வசிப்பவர்களுக்கும், கடை வைத்திருப்பவர்களுக்கும் மறுவாழ்வு நிவாரணங்கள் விரைந்து வழங்கப் பட உள்ளது. சுக்ரீவ கோட்டையில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழி யில் நான்கு வழிச்சாலையும் அமைக்கப்படும். இதற்கு ‘ராம ஜென்ம  பூமி கோயில் வழி’ என்று பெயரிடப் படும். இதேபோல் கோயிலை சுற்றி பல அகலப்பாதைகள், உருவாக்கப்பட்டு சிறந்த சாலைக் கட்டுமான வசதிகள் அமைக்கப்படும்” என்று உ.பி. அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.