புதுதில்லி, ஜன. 13 - காங்கிரஸ் இளம்தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்ற ஒன்றிய அரசின் முன்னாள் நிதித் துறை செயலாளர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளராக இருந்தவர் அரவிந்த் மாயாராம். இவர் 1978-ஆம் ஆண்டு பேட்ஜ், ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், ராஜஸ்தா னில் பணியாற்றியதுடன், ஒன்றிய அரசிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர். காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது ஒன்றிய நிதித்துறைச் செயலாளராகவும் இருந்து, பணி ஓய்வுபெற்றவர். தற்போது ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வரான அசோக் கெலாட்டின் ஆலோசகராக உள்ளார். அண்மை யில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் அரவிந்த் மாயாராம் கலந்து கொண்டார். இந்நிலையில்தான் வியாழனன்று திடீரென தில்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஒன்றிய நிதித்துறை செயலாளராக பணி யாற்றிய போது இந்திய ரூபாய் நோட்டு களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன் படுத்தப்படும் நூலிழை (Thread) விநியோகிக் கும் ஒப்பந்தத்தை இங்கிலாந்தின் டி லா ரூ இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு விதிமீறி நீட்டிப்பு செய்ததாக கூறி, அரவிந்த் மாயா ராம் மீது வழக்குபதிவு செய்துள்ள சிபிஐ அதி காரிகள், அந்த வழக்கின் அடிப்படையிலேயே தற்போது மாயாராமின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அரவிந்த் மாயாராம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இருப்பதால்தான் பழைய வழக்குகளை தூசித்தட்டி அவரது வீடு, அலுவலகங்களில் சிபிஐ மூலம் சோதனை நடத்தப்பட்டு உள்ள தாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. “ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் (ரகு ராம் ராஜன்) பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றபோது, பாஜக தாக்கிப் பேசியது. ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் கைகோர்த்த போது அவர் பற்றியும் அவதூறு பரப்பியது. இப்போது முன்னாள் நிதித் துறை செயலாளர் மீது சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. பிரதமர் மோடியின் சிபிஐ-யால் வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ளது. மோடியின் எப்டிஐ (FDI) கொள்கை என்பது பயம் (Fear), அவதூறு (Defamation) மற்றும் அச்சுறுத்தல் (Intimidation) என்பதாக உள்ளது. இது கோழையின் மனநிலையாகும். இருப்பினும் பாரத் ஜோடோ யாத்திரை தொடரும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.