ராஞ்சி, டிச.23- ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கி ரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் கும்பல் படுகொலைகள் மற்றும் கும் பல் வன்முறையைத் தடுக்கும் (Prevention of Mob Violence and Mob Lynching Bill, 2021) புதிய சட்ட மசோதாவை சோரன் அரசு கொண்டு வந்துள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சி களின் எதிர்ப்புக்கு இடையே அதனை சட்டமன்றத்திலும் நிறைவேற்றியுள் ளது. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்க ளில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் கள் என்று கூறி, இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்களை கும்பல் படு கொலை செய்வது சர்வ சாதாரண மான சம்பவமாக உள்ளது. இது போன்ற வன்முறைக்கு ஜார்க்கண்ட் டில் இடமில்லை என்பதை உறுதிப் படுத்தும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. “ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் 53 கும்பல் தாக்குதல் சம்ப வங்கள் நடந்துள்ளன.
இதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சட்டத் தின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதி்க்கப்படும். கும்பல் கொலைக்கு சதித்திட்டம் தீட்டுவோர், உதவி செய்வோரும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படு வார்கள். சமூகத்தில் பிரச்சனை ஏற் படுத்தும் வகையில் பேசுதல், செய்தி களை பரப்புதல் போன்ற நடவடிக்கை களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டா லும் ரூ. 3 ஆண்டுகள் சிறையும், ரூ. 3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப் படும்” என்று ஜார்க்கண்ட் அரசின் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆளு நர் ஒப்புதல் அளித்தால், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மணிப்பூர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து கும்பல் வன்முறைக்கு எதிராக சட்ட மியற்றிய நான்காவது மாநிலமாக ஜார்க்கண்ட் இருக்கும் என்பது குறிப் பிடத்தக்கது.