states

‘தூய்மை இந்தியா’வின் 9 ஆண்டுகள் நாறுகிறது மோடியின் படாடோபம்!

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபின், 2014-ஆண்டு ‘காந்தி ஜெயந்தி’ நாளன்று ‘தூய்மை இந்தியா’ திட்டம் துவங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 50  ஆண்டுகளுக்கு மேலாகியும் நாட்டில்  கழிப்பறை வசதியைக் கூட பூர்த்தி செய்து தரமுடியவில்லை என்று கூறி, பிரதமர் மோடி இந்த திட்டத்தைத் துவக்கி  வைத்தார். கழிப்பறைகள் இல்லாத வீடு களே இல்லை என்ற நிலையை உரு வாக்குவோம் என்றும் சூளுரைத்தார். தற்போது, ‘தூய்மை இந்தியா’ திட்டம் துவங்கி 9 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், நாட்டின் பொதுக் கழிப்பறை வசதிகள் இப்போதும் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது- நாட்டின் பொதுக் கழிப்பிட வசதி குறித்து சமூக ஊடக தள மான ‘லோக்கல்-சர்க்கிள்ஸ்’ ஆய்வு  மேற்கொண்டது. பல்வேறு மாநிலங் களின் 341 மாவட்டங்களில் நடத்தப் பட்ட இந்த ஆய்வில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கருத்து களைப் பதிவு செய்துள்ளனர். ஆய்வில் பங்கேற்று கருத்து தெரிவித்தவர்களில் ஆண்கள் 69 சதவிகிதம் பேர் மற்றும் பெண்கள் 31 சத விகிதம் பேர் ஆவர். மேலும், முதல்நிலை மாவட்டங்களில் இருந்து 47 சதவிகிதம் பேரும், இரண்டாம் நிலை மாவட்டங்களில் இருந்து 31 சதவிகிதம் பேரும், மூன்றாம் மற்றும் நான்கு நிலை மாவட்டங்களில் இருந்து 22 சதவிகிதம் பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

இதில், நாட்டின் பொதுக்கழிப்பறை வசதிகள் முன்னேற்றம் அடையவில்லை என 52 சதவிகித மக்களும், முன்னேற்றம் அடைந்திருப்பதாக 42 சதவிகித மக்களும் தெரிவித்துள்ளனர். பொதுக் கழிப்பறைகளின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சராசரியாக செயல்படு கின்றன என்று 37 சதவிகிதம் பேரும்,  சராசரிக்கும் குறைவாக செயல்படு கின்றன என்று 25 சதவிகிதம் பேரும், மோசமாக செயல்படுகின்றன என்று 16 சதவிகிதம் பேரும், மிகவும் மோச மாக செயல்படுவதால் பயன்படுத்தா மலேயே திரும்பி விட்டதாக 12 சதவிகி தம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். வெளியே செல்லும்போது பொதுக் கழிப்பறை வசதியைப் பயன்படுத்து வதைத் தவிர்த்து வணிக நிறுவனத்துக்கு சென்று அங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்துவதாக ஆய்வில் பங்கேற்ற 68 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதற்கான காரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பொதுக் கழிப் பறைகள் மோசமான அல்லது பயன் படுத்த முடியாத நிலையில் இருப்ப தாக பெரும்பான்மையாக 53 சத விகிதம் பேரும், செயல்படும் நிலை யில் இருந்தாலும் சரியாக பராமரிக்கப் படுவதில்லை என்று 37 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். நன்கு பராமரிக்கப் பட்டு வருவதாக 10 சதவிகிதம் பேர் மட்டுமே பதில் அளித்துள்ளனர். மும்பை, தில்லி, பெங்களூரு போன்ற நாட்டின் பெருநகரங்களிலும் கட்டணக் கழிப்பறை அல்லாத பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துவது இன்ற ளவும் சவாலான விஷயமாகவே இருப்ப தாக மக்கள் கூறியுள்ளனர். பொதுக் கழிப்பறை வசதியைப் பயன்படுத்தாததற்கு முக்கிய கார ணங்களாக அதன் சுகாதாரமின்மை, தூய்மை இன்மை மற்றும் பராமரிப் பின்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ள னர்.