புதுதில்லி, மார்ச் 29- அதானியின் ஊழல், ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரங்களால் ஏற்பட்ட எதிர்க் கட்சிகளின் அமளி காரணமாக, புதன்கிழமை யன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வுகள் மார்ச் 13 அன்று துவங்கின. ஆனால், அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசார ணைக்கு உத்தரவிடுவதில் ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் காட்டி வருவதால், துவங்கிய நாளிலி ருந்து கடந்த 12 நாட்களாக நாடாளுமன்றம் தொடர்ச்சியாக முடங்கி வருகிறது. இந்நிலையில், புதனன்று காலை 11 மணிக்கு 13-ஆவது நாள் அமர்வுகள் துவங்கின. அப்போ தும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மோடி அரசு செவிசாய்க்கவில்லை. மாறாக, மக்களவை யில் மூன்று மசோதாக்களையும், மாநிலங்கள வையில் இரண்டு மசோதாக்களையும் அறி முகப்படுத்தி அதன் மீது விவாதம் நடத்தப்போகி றோம் என்று, அதானி விவகாரத்தை திசைத் திருப்புவதிலேயே குறியாக இருந்தது. இதையடுத்து, அதானி விவகாரம் தொடர் பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்த பழிவாங்கல் நடவடிக்கை யைக் கண்டித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. இத னால், மக்களவையில் எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை. தொடர் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகலிலும் இதேநிலை தொடர்ந்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றார். அப்போது, ராகுல் காந்தி யின் எம்.பி. பதவியை பறித்ததற்காக, சபாநாய கர் ஓம் பிர்லா மீது ஏப்ரல் 3-ஆம் தேதி நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கை கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக வும், காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இதுதொடர் பான நோட்டீஸை தயாரித்து ஆலோசனைக்கு முன்வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மக்களவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின்படி, ஒரு உறுப்பினர், சபா நாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவி நீக்குவதற்கான தீர்மானம் குறித்து நோட்டீஸ் கொடுக்க விரும்பினால் முதலில் அவர் மக்க ளவை பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்ப வேண்டும். அவரிடமிருந்து தகவல் பெற்றவுடன் இதற்கான அறிவிப்பு பட்டியலில் உள்ளிடப்படும். அதன் பிறகு 14 நாட்களுக்குப் பிறகு தீர்மானம் குறித்து அறிவிப்பு வெளிவரும். ஆனால், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளதால், நம்பிக்கை யில்லா தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டாலும், இந்தக் கூட்டத்தொடரில் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்பதால், இவ்விஷயத்தில் இறுதிமுடிவு எதுவும் எட்டப்பட வில்லை என கூறப்படுகிறது. ராகுலின் சாவர்க்கர் குறித்த பேச்சிற்காக, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை, சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி) செவ்வாயன்று புறக்கணித்திருந்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் சம ரசப் பேச்சைத் தொடர்ந்து, புதனன்று நடை பெற்ற கூட்டத்தில் சிவசேனா கலந்து கொண்டது.