states

img

ஆதி சங்கரருக்கு ஓம்காரேஸ்வரில் ரூ. 2 ஆயிரம் கோடியில் சிலை!

இந்தூர், ஜன.12- மத்தியப் பிரதேச பாஜக அரசானது, ஆதி சங்கரருக்கு ரூ. 2 ஆயிரம் கோடி யில் சிலை அமைக்க திட்டமிட்டுள்ளது. படேலுக்கு சிலை, ராமருக்கு சிலை, சிவனுக்கு சிலை, சத்ரபதி சிவாஜிக்கு சிலை என்று பல ஆயிரம் கோடி ரூபாயை சிலை அமைப்பதற்கு பாஜக ஆட்சியாளர்கள் செலவிட்டு வருகின்ற னர். இந்த வரிசையில் தற்போது சனா தன வைதீக மதத்தை நாட்டில் நிலை நிறுத்தியவர்களில் ஒருவரான ஆதி சங்கரருக்கும் சிலை அமைக்க, முடிவு செய்துள்ளனர். காந்தவா மாவட்டம், ஓம்காரேஸ்வ ரில் 108 அடி உயரத்தில் ஆதி சங்கராச் சார்யாவுக்கு சிலை செய்ய முடிவெ டுத்து கடந்த 2017 ஆம் ஆண்டே மக்க ளிடம் இருந்து உலோகங்களைப் பெறும் ‘எகாதம் யாத்ரா’ என்ற பயணம் தொடங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ம.பி. மாநில முதல் வர் சிவராஜ் சிங் சவுகான், ‘ஆச்சார்யா சங்கரா சமஸ்கிருத ஏக்தா நியாஸ் அறக்கட்டளை’ நிர்வாகிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.

ஆவேதஸ்ஸானந்த் கிரி ஜி மகராஜ் உள்ளிட்ட சாமியார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்தே, “மத்தி யப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வ ரில் ரூ. 2 ஆயிரம் கோடியில் சங்கராச் சார்யா சிலை வைக்கப்படும். இந்த உலகம் ஒரு குடும்பம்தான், அதுதான் இந்த சிலையின் தத்துவம். அறக்கட்ட ளையின் நிர்வாகிகளிடம், உறுப்பி னர்களிடம் இருந்து ஆலோசனைகள், கருத்துக்களைப் பெற்று இந்தத் திட் டத்தை அரசு செயல்படுத்தும்” என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரி வித்துள்ளார். ம.பி. பாஜக அரசின் இந்த திட்டத் திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. மாநிலத்தின் பட்ஜெட் மதிப்பே ரூ.2  லட்சத்து 41 ஆயிரம் கோடிதான் எனும் நிலையில், அரசின் கடன் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக உள்ளது. தனி நபர் தலையில் ரூ.34 ஆயிரம் கடனாக இருக்கிறது. இவ்வாறிருக்கையில் சிலை அமைக்கும் திட்டத்திற்காக. ரூ.2  ஆயிரம் கோடியை செலவிடுவது சரி தானா? என்று பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.